Showing posts with label Mohan. Show all posts
Showing posts with label Mohan. Show all posts

Sunday, October 28, 2018

Kunguma Chimizh - Kai Valikkuthu

டம் : குங்குமச்சிமிழ் (1985)
இசை : இளையராஜா
பாடியவர் :  மலேசியா வாசுதேவன், S.ஜானகி
பாடல் வரி : வாலி

Image result for kunguma chimizh tamil movie




ஹா... ஹா....
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
ஸ்... ப்பபபா...
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா 
நான் இழுத்தரைக்கிற போது கை பழுத்திருக்குது பாரு 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்யா 

அம்மி அரைப்பது பொம்பள வேலதான்டி....  ஹயே
அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏன்டி... ம்க்கும் 
அம்மி இழுத்தரைக்கிற போது 
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்டி 

ஹ்..ஆ...
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா ஹ்ஹஹ
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா ஹ்ம்...


நாந்தான் தனியா என்னதான் பண்ணுறது
சோறு கொழம்பு எப்ப தான் பொங்குறது 
மாடாட்டம் வேலை செய்ய என்னால ஆவாது 
மாமா நீ ஒத்துழைச்சா எம்மேனி நோவாது 
ஆளாகி நான் சமஞ்சபுள்ள ஆனாலும் நான் சமைச்சதில்லை 
கண்ணாலம் கட்டாமலே குடித்தனமா ஆயாச்சு

அம்மி அரைப்பது 
ஏய்..அம்மி அரைப்பது பொம்பள வேல தான்டி.... 

ம்..ஹ்ஹ

அடி அதுக்குப்போயி என்னை அழைப்பது ஏன்டி...

மாமா..

அம்மி இழுத்தரைக்கிறபோது 
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே 
நீ அழுத்தமான ஆளு என் கழுத்தறுப்பது ஏன்டி 

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா 
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா ஹ்ஆ..



அம்மா தாயே முடிஞ்சா பாடுபடு
அலுப்பும் சலிப்பும் இருந்தா ஆளவிடு

பொல்லாத கோவமென்ன கண்ணான ராசாவே
வேணாண்ணு தள்ளி வச்சா ஹ்ஹ வாடாதோ ரோசாவே

மானே வா பொய் கோவந்தான்டி 
தேனே வா ஒரு தாபந்தான்டி 
கண்ணே நீ கஷ்டப்பட்டா எம்மனசு தாங்காது 

கை வலிக்கிது ஹஹ்ஹ...
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா

அட அம்மி அரைச்சிட நானிருக்கிறேன் வாம்மா

அட ஒண்ணாகத்தான் நாமே 
சேர்ந்து அம்மி அரைப்போமே 
ஒண்ணாகத்தான் நாமே 
சேர்ந்து அம்மி அரைப்போமே

கை வலிக்கல கை வலிக்கல மாமா

ஹா.....

ஹஹ்ஹ..இப்ப..கை வலிக்கல கை வலிக்கல

ஹஹ்ஹ... ஹஹ்ஹ...

Tuesday, July 2, 2013

Idaya Kovil - Idhayam Oru Kovil

படம் : இதய கோவில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் இளையராஜா


Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...




ஆஆஆ...  ஆஆஆ... ஆஆ...

ஆஆஆ... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆ...

இதயம் ஒரு கோவில்...
அதில் உதயம் ஒரு பாடல்...

இதயம் ஒரு கோவில் 
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்


ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

-------------- காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்

ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
------------
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்


Payanangal Mudivathillai - Thogai Ilamayil

படம் : பயணங்கள் முடிவதில்லை (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for Payanangal Mudivathillai
Image result for payanangal mudivathillai



ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ...

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ


கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்

இதழ்களிலே பௌர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ


பூமி எங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும்

புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு...


Sunday, March 31, 2013

Nenjathai Killathe - Paruvame Puthiya

படம்: நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள்: பஞ்சுஅருணாசலம்






பருவமே புதிய பாடல் பாடு


பருவமே புதிய பாடல் பாடு


இளமையின் பூந்தென்றல் ராகம்


இளமையின் பூந்தென்றல் ராகம்


பருவமே...


புதிய பாடல் பாடு...



பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா

சிரிக்கிறாய் ஹோ ஹோஹோ ரசிக்கிறான் ராஜா

சிவக்கிறாள் ஹோ ஹோஹோ துடிக்கிறாள் ராணி

தீபங்கள் போலாடும் பார்வை சேரும்

பருவமே...

புதிய பாடல் பாடு...



தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ

அழைக்கிறான் ஹோ ஹோஹோ நடிக்கிறான் தோழன்

அணைக்கிறான் ஹோ ஹோஹோ துடிக்கிறாள் தோழி

காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே...

புதிய பாடல் பாடு...

இளமையின்...

பூந்தென்றல் ராகம்

பருவமே...

புதிய பாடல் பாடு...



Thursday, February 7, 2013

Idaya Kovil - Kootathile Kovil Pura

படம் : இதய கோவில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் முத்துலிங்கம்


Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...



கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே 
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே 
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ...
ச ப க ம ப... ச ப க ம ப... ப ச நி த நி த ப...

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
உன் பார்வை என் நெஞ்சில் யாழ் மீட்டுது
உன் ஆசை என்னைத் தாலாட்டுது
பூங்குயிலே… 
பூங்குயிலே உந்தன் பாதையிலே 
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு 
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து 
வாழுகின்றாய் கோவில்கொண்டு
ஆனந்த மேடையில் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட எண்ணுது என் மனமே
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

தத்தித் தகதாம் தளாங்கு தகதாம் தரிகிட தகதாம் 
தஜம் தஜம் தஜம் தஜம் 

ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ...

நி க த... ச ரி க... ச க ரி க ப... த ச... நி த...

நீதானே நானாடும் பிருந்தாவனம்

நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கன்னிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரைப்பூ காலெடுத்து நீ நடக்கும் வேளையிலே
தாளத்துடன் சந்தங்களைக் 
கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
என்னிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான்மழை போல் இந்தப் பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே 
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணைப் பார்க்கையிலே 
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது

ச க ம ப த நி ச நி ச க ம
கூட்டத்துலே கோவில் புறா
நி ச நி த த த நி த நி ப ப ம க நி த ப ச நி த நி ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா
க ம க ம க ச  க ம ப ம க ச  ப ப நி நி  
 த த ச ச   நி நி  க க  ப த நி  ச க ம ப
கூட்டத்துலே கோவில் புறா

தத்தித்தகதிமி தளாங்கு தகதிமி தகதித் தகதிமி தோம் தித்தோம்
தித் தகிட தகிட தகிட தகிட
தகிட ததுமி தஜனு தனுத தஜம் தஜம் தஜம் தகிட
தகதாம் தத் தரிகிட தரிகிடதத்
திரிகிட தரிகிடதோம் க்ரிகிட தரிகிடதோம்
தத்தகதிமி தகதிமி தக திரிகிடதோம்

திரிகிடதோம் திரிகிடதோம் திரிகிடதோம்

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

கூட்டத்துலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா

மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை

படம்: மெல்ல திறந்தது கதவு (1986)
இசை: M.S. விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி




தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க


காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்


தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம்… இணைவோம்…

இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ

வெறும் மாயமாகுமோ

தேடும் கண் பார்வை தவிக்க

துடிக்க...

Monday, January 21, 2013

உதய கீதம் - சங்கீத மேகம்

படம் : உதய கீதம் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : முத்துலிங்கம்





சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

லலல... லலல...
லல... லல... ல...


போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே.... ஹோ.....


சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்


உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே.... ஹோ.....


சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே... ஒ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்


Friday, December 14, 2012

மெளன ராகம் - பனி விழும்


படம் : மெளன ராகம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் :  S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள் : வாலி






லாலா... லா... லாலா... லா... லா... லாலாலாலா

பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வா... வா....

பனி விழும் இரவு


பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க

பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க

மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்

தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்

தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு நனைந்தது நிலவு


லால... லா... லால... லா... லால... லா...
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது

காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்

விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வா... வா...

பனி விழும் இரவு நனைந்தது நிலவு

Monday, December 3, 2012

உதயகீதம் - பாடு நிலாவே


படம்: உதயகீதம் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: .M. மேதா






ஆ... ஆ... ஆ... ஆஆஆ...
ஆஆ.... ஆ... ஆஆஆ...
ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆ... ஆ....ஆஆஆ...

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர


நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே

பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே


ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே...

தேன் கவிதை...

பூ மலரே...



Wednesday, November 7, 2012

தென்றலே என்னை தொடு - புதிய பூவிது பூத்தது

படம்: தென்றலே என்னை தொடு (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள்: வாலி






புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ... சேதி சொன்னதோ...
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ... ஏன்... ஏன்... ஏன்... 


புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது

பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது

என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ

கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ

என்ன சொல்லவோ மயக்கம் அல்லவோ

கன்னி அல்லவோ கலக்கம் அல்லவோ

தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ

சத்தமின்றியே முத்தமிட்டதும்
பூபாளம் தான்... வா... வா... வா...

புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ... சேதி சொன்னதோ...
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ... சொல்... சொல்... சொல்...


புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது



கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது

கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ

உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ

என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ

உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ

தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது

உன்னை கண்டதும் என்னை தந்ததும்
உண்டாகுமோ தேன்....


புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

தூது வந்ததோ...

சேதி சொன்னதோ...


தூது வந்ததோ...

சேதி சொன்னதோ...


நாணம் கொண்டதோ... ஏன்... ஏன்... ஏன்... 


புதிய பூவிது பூத்தது

இளைய வண்டு தான் பாத்தது

Tuesday, October 23, 2012

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்கு


படம் :மெல்ல திறந்தது கதவு (1986)
பாடியவர்: K.S. சித்ரா
இசை : M.S.விஸ்வநாதன் - இளையராஜா
பாடல் வரி : வாலி







குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...

மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ... குக்கூ... குக்கூ..

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...


Monday, October 22, 2012

மெல்ல திறந்தது கதவு - ஊரு சனம்



படம் :மெல்ல திறந்தது கதவு (1986)
பாடியவர்: S. ஜானகி
இசை : M.S.விஸ்வநாதன் - இளையராஜா
பாடல் வரி : கங்கைஅமரன்







ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் வி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே... எம் மாமனே...

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்... இந்த நேரந்தான்...
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

Sunday, October 21, 2012

சொந்தம் 16 - அம்மன் கோயில்


படம் : சொந்தம் 16 (1989)
இசை : சங்கர் கணேஷ்

பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: 






அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு


அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்



அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்


நீரோடையில் நீந்தும் செந்தாமரை
மலர்தான் என முகம்தான் கொண்ட பெண்பாவைதான்
மேல்வானிலே தோன்றும் மூன்றாம் பிறை
புருவம் என அமையும் இளம் பூந்தோகைதான்
இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட
கெண்டைமீனும் வண்ண மானும் கண்ணிரெண்டில் துள்ளாதோ



அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்


மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான்
மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்
தென்னாடுதான் பேசும் பண்பாடுதான்
காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்
அவள்தான் என்னோடுதான் பூமாலைதான் சூட
அடடா எங்கே அந்த பெண்தான் என்று தேட
என்னைத்தேடி சிந்து பாடி சொப்பனத்தில் வந்தாளே

அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்

அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு


Sunday, September 4, 2011

Idaya Kovil - Vanuyarntha Solaiyile

படம் : இதயகோயில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து


Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...



வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே


வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை



வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி

வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் 
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன் 
வானுயர்ந்த சோலையிலே

Popular Posts