Showing posts with label Amala. Show all posts
Showing posts with label Amala. Show all posts

Thursday, March 19, 2020

Mythili Ennai Kadhali - Ada Ponana

படம்: மைதிலி என்னை காதலி (1986)
இசை: T. ராஜேந்தர்
பாடியவர்கள்: T. ராஜேந்தர்
பாடல்வரிகள் : T. ராஜேந்தர்

Image result for Mythili Ennai Kadhali


அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை


ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா
நீ ஆசை வச்ச பச்சை கிளியோ
வேறு ஜோடி தேடி போயிருந்தா
நீ பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேறு தென்றலோட ஆடி இருந்தா

பச்சை புள்ள போல அழுவாத
பாவம் பூவை போல காயாத
பச்சை புள்ள போல அழுவாத
பாவம் பூவை போல காயாத

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை 


பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
பலநாளா பழகிருப்பா
அதில் பலனேதும் இல்லையப்பா
பூவை போல பேசி சிரிப்பா
அந்த பேச்சிலதான் அர்த்தம் இல்லப்பா
அதை காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரு ஆகாதே
அதை காதலுன்னு நினைக்காதே
நீயும் கானல் நீரு ஆகாதே

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை


சமைச்சு வச்ச மீனு குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
சமைச்சு வச்ச மீனு குழம்ப
நீயும் சலிக்காம தின்னபோதே
தாலி கட்ட நினச்சிருப்பே
நீயும் தாரமாக்க துடிச்சிருப்பே
அன்று கைய்யதானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை அழுவு என்றா
அன்று கைய்யதானே கழுவு என்றா
இன்று காதல் இல்லை அழுவு என்றா

அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை - நீ
வைக்காத பொண்ணு மேல ஆசை





Wednesday, September 19, 2018

Velaikaran - Thottathula Pathikatti

படம் : வேலைக்காரன் (1987)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S.P. சைலஜா
பாடல்வரிகள் : மு. மேத்தா


Image result for Velaikkaran 1987



ஏங்குதே மனம் இன்ப நாளிலே
தூங்குதே ஜனம் இந்த ராவிலே
தாங்குதே குணம் போதை வாழ்விலே
ஏங்குதே தினம் பாடும் பாடலை
ஏங்குதே மனம் தூங்குதே ஜனம்
தாங்குதே குணம் ஏங்குதே தினம்
தினம்...

தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம்
மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம்
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம் யே... ஹே...
கனவுகள் வளரும் கவிதைகள் மலரும்
இது தான் நம் தோட்டம்
இது தான் நம் தோட்டம் 
தோட்டம்...


தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் 


சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
சிங்காரமா ஊரு இது சென்னையின்னு பேரு
ஊரை சுத்தி ஓடுதைய்யா கூவம் ஆறு
தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும்
கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்

==================== MP3 Only ====================
கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க
மதுரைய எரிச்சவளே மனசு மாற கூடுமுங்க
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
நித்தமும் வீதியில் ஊர்வலமா
சத்தமும் சண்டையும் சம்மதமா
புத்தனும் இப்போ பட்டணம் வந்தா
போதை மரத்துல ஏறிக்குவான்
==================== MP3 Only ====================

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் 


கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா
கல்லூரியப் படிச்சதுல கர்ப்பம் ஆனா
கட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்  கட்டாந்தரை தான் இருக்கு
கல்யாண மண்டபங்கள் கட்டி வைச்சு காத்திருக்கு
கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு
இன்னமும் கதைய சொல்லட்டுமா
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
இன்னமும் கதைய சொல்லட்டுமா  
குப்பைய கூடையில் அள்ளட்டுமா
சொல்வது ஒண்ணு செய்வது ஒண்ணு 
பட்டணம் கைகளை சுட்டதண்ணே

தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே
சோத்துகுள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே
கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டுடும் கெட்டுடுமே


Friday, June 7, 2013

அக்னி நட்சத்திரம் - நின்னுக்கோரி

படம் : அக்னி நட்சத்திரம் (1988)
இசை : இளையராஜா
பாடியவர் : K.S.சித்ரா
பாடல்வரிகள் : வாலி



நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்


உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க

உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சு ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்


பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு

என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாக கொதிக்குது

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
இசைத்திட என்னைத்தேடி வரணும் வரணும்



Thursday, February 7, 2013

மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை

படம்: மெல்ல திறந்தது கதவு (1986)
இசை: M.S. விஸ்வநாதன், இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி




தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க


காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல்வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா

கனிவாய் மலரே உயிர் வாடும் போது
ஊடலென்ன பாவம் அல்லவா

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்


தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம்… இணைவோம்…

இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ

வெறும் மாயமாகுமோ

தேடும் கண் பார்வை தவிக்க

துடிக்க...

Monday, November 26, 2012

கற்பூர முல்லை - பூங்காவியம்


படம் : கற்பூர முல்லை (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், P.சுசீலா & K.S.சித்ரா
பாடல்வரிகள்: வாலி





பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்


பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக்கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
ஓ... ஓஓஓஓ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ


யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
ஓ... ஓஓஓஓ... புதுக்கதை அரங்கேறிடும்


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

Wednesday, March 23, 2011

அக்னி நட்சத்திரம் - தூங்காத விழிகள்


படம் : அக்னி நட்சத்திரம் (1988)
இசை : இளையராஜா

பாடியவர் : 
S.ஜானகி, K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி





தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 
செம்பூ மஞ்சம் விரித்தாலும் 
பன்னீரைத் தெளித்தாலும் 
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 
தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

மாமர இலை மேலே.. ஆ... ஆ... ஆ... 
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே 
பூமகள் மடி மீது நான் தூங்கவோ 
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே 
பூமகள் மடி மீது நான் தூங்கவோ 

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல் 
ராஜனை கையேந்தி தாலாட்டவோ 

நாளும் நாளும் ராகம் தாளம் 
சேரும் நேரம் தீரும் பாரம் 

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 
செம்பூ மஞ்சம் விரித்தாலும் 
பன்னீரைத் தெளித்தாலும் 
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 
தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக 
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ 

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் 
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட மலராட கொடியாட 
மாருதம் உறவாடும் கலை என்னவோ 

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற 
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ 

மேலும் மேலும் மோகம் கூடும் 

தேகம் யாவும் கீதம் பாடும் 
ஆஆ...ஆஆ...ஆ.. 

தூங்காத விழிகள் ரெண்டு 

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் 

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 

தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

Saturday, January 8, 2011

சத்யா - வளையோசை



படம் : சத்யா (1988)
இசை : இளையராஜா

பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம், லதா மங்கேஷ்கர்
பாடல் வரி : வாலி





வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்


வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது


ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது




சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

லாலலாலலாலா லாலா
லாலலாலலாலா லாலா ஹே
லாலலாலலாலா லாலலாலலாலா

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்


வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகலகலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு எனச் சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

Sunday, August 8, 2010

மெல்ல திறந்தது கதவு - வா வெண்ணிலா


படம் :மெல்ல திறந்தது கதவு (1986)
பாடியவர்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
இசை : M.S.விஸ்வநாதன் - இளையராஜா
பாடல் வரி: வாலி






வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே


வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே



மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

Popular Posts