Thursday, March 16, 2023

Thiruchitrambalam - Life of Pazham

படம் : திருச்சிற்றம்பலம் (2022)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல்வரிகள் : விவேக்





கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்
எனை தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்


நீ வந்ததால் இதுவும் தூசாகுது
உன்னால தான் மனசு லேசாகுது
என் வாழ்க்க இதுதான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக எக்காத திருக
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக நான் ஆன போதும்
திரி ஒரம் நீதாண்டி என ஏத்துன

ஆத்தாடி அது தானே நீயும்

கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

கண்ணே...  பெண்ணே... எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி

எனக்கினு ஒரு ... எனக்கினு ஒரு
உயிர் இருக்குது... உயிர் இருக்குது
மழ பொழியிது... மழ பொழியிது
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழ பொழியிது
மழ பொழியிது
மழ பொழியிது

ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்

VTK - Mallipoo

படம் : வெந்து தணிந்தது காடு (2022)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : மதுஸ்ரீ
பாடல்வரிகள் : தாமரை






Hello, மச்சான்

சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்குசிக்கும்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்குசிக்கும்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...

ஏ... மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?
பத்து தல பாம்பா வந்து முத்தம் தரப்போற
நான் ஒத்தையில தத்தளிச்சேன்
தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்னநான் சந்திச்சேன்
ஹே எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?
பத்த‌மட பாயில் வந்து சொக்கி விழப்போற


வாசல பாக்குற கோலத்தக் காணோம்
வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்
சோலி தேடி போனே காணாத தூரம்
கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம்
காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்
ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...
சிங்... சிங்... சிங்... சிங்குசிக்கும்...

ஏ மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?


பத்து தல பாம்பா பாம்பா பாம்பா
முத்தம் தரப் போற போற போற
பத்து தல பாம்பா போய் முத்தம் தரப்போற மச்சான்
ஏ, மச்சான்-மச்சான்-மச்சான்-மச்சான், மச்சான், மச்சான்
மச்சான் எப்போ போக போற?
மச்சான் எப்போ போக போற?
மச்சான் எப்போ எப்போ?
மச்சான் எப்போ போக போ......ற?


தூரமா போனது துக்கமா மாறும்
பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்
ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்
கோழி கூவும் போதும் தூங்கமா வேகும்
அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ
போதும் போதும் சொல்லாம வந்து சேரும்
ஏ மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே
அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?
உத்தரத்த பார்த்தே நானும் மக்கிவிடப் போறேன்
அட எத்தன நாள் ஏக்கம் இது
பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே துணி காயுதே
கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்
சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்
மச்சான் எப்போ வரப்போற?
மச்சான் எப்போ வரப்போற?
சொல்லிக்காம வந்து என்ன சொக்க விடப் போற

Wednesday, March 15, 2023

Thiruchitrambalam - Thenmozhi

படம் : திருச்சிற்றம்பலம் (2022)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன்
பாடல்வரிகள் : தனுஷ்






தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ


நெஜமா நா செஞ்ச பாவம்
முழுசா உன் மேல வெதச்ச பாசம்
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேக்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒண்ணும் நானும் இல்ல

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

Thiruchitrambalam - Mayakkama Kalakkama

படம் : திருச்சிற்றம்பலம் (2022)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள் : தனுஷ்
பாடல்வரிகள் : தனுஷ்





மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொழ‌ப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா

ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு
என்ன சங்கதி புரியலையே
இப்போ என் கதி தெரியிலயே

மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொளப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா


வேர்ரா என் லைஃபில் நீ தான்
பேர்ரா என்னாலும் பாக்கல நான் தான்
எனக்கு நீ தானா பெஸ்ட்டு
கடவுள் வச்சானே டெஸ்ட்டு டெஸ்ட்டு

பாசம் வச்சேன் ஓவரா
இது தான் லவ் ஃபீவரா
நான் என்ன பண்ணுவேன்
நீயே சொல்லு ஈஸ்வரா
என் நெஞ்சில் பூந்துகிட்ட
இப்போ நான் மாட்டிக்கிட்டேன்

தேன்மொழி பூங்கொடி
மைன்டு ஃபுல்லா நீயடி
வான்மதி பைங்கிளி
தோழி இப்போ காதலி

Windy - Ayyo Saami

படம் : ஐயோ சாமி (2023)
இசை : சனுக்கா விக்ரமசிங்கே
பாடியவர்கள் : விண்டி கோணதிலக்கே
பாடல்வரிகள் : பொத்துவில் அஸ்மின்







ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்..
மனச்சாட்சியை நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்...


உனைப்போன்ற ஆணை 
நான் நம்பி வந்தேன் 
உயிர்கொன்று நீ ஓடினாயே...
எனைப்போன்ற பெண்ணை 
ஏமாற்றிவிட்டு 
தினம் நூறு பொய்கூறுறாயேன்?

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்...
மனச்சாட்சியை நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்...


தேன்போலே பேசி 
துரோகங்கள் செய்தாய்   
அதை யாருக்கும் நீ செய்யாதே
நான் போன பின்னர்
எனைப்பற்றி இழிவாய் 
யாரோடும் பேசிக்கொல்லாதே

ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்...
மனச்சாட்சியை நீ விலைபேசினாய்
அட நீ சொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் 
பொய் பொய்யா சொல்லி 
ஏமாத்தினது போதும்...

Viduthalai Part 1 - Kaattumalli

படம் : விடுதலை (2023)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, அநன்யா பட்
பாடல்வரிகள் : இளையராஜா



வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி...

வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்த்தும் கவனமில்ல
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுத‌ம்மா
எம் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி...


கனவெனக்கு வந்ததில்லை
இது நெசமா கனவு இல்ல

கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நெனைவுகளே

ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்த்தும் கவனமில்ல

காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல


கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல

நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள

இருசிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா

வழி நெடுக காட்டுமல்லி.....

Viduthalai Part 1 - Onnoda Nadandhaa

படம் : விடுதலை (2023)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : தனுஷ், அநன்யா பட்

பாடல்வரிகள் : சுகா


Download this MP3


ஒன்னோட நடந்தா... கல்லான காடு...

ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!


நீ போகும் பாத பூங்கால்களாலே

பொன்னான வழியாய் மாறிடுமே!


ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!

நீ போகும் பாத பூங்கால்களாலே

பொன்னான வழியாய் மாறிடுமே!


ராசாவே உன்னால ஆகாசம் விடியம்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!


ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!


சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே


ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!



காத்தில் வரும் புழுதியப்போல்

நம்ம தூத்துகிற ஊரு இது

துக்கத்தில துவண்டிருந்தா

அது தூக்கிவிட நெனைக்காது


முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது

பின் திரும்பி பாக்காதே

ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்

என்றும் இது மாறாதே


நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்

அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்


கல்லான காடு ஒன்னோட நடந்தா

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


ஆராரிராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ஆராரிராரோ

ஆராரிராரி ராரிராரோ

ஆராரிராரி ராரிராரோ


ஏத்தி வச்ச தீபமொண்ணு

எந்த சாமிகளும் பாக்கலியே

சேத்து வச்ச கனவுகள

நிறைவேத்தி விட யாருமில்லையே


நிக்காத காலம் நேராக ஓடும்

எப்போதும் மாறாது

இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்

இல்லாமல் போகாது

நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு

நம் வாழ்வில் என்றென்றும்

சந்தோஷம் பொங்கி வரும்


கல்லான காடு ஒன்னோட நடந்தா

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ராசாவே உன்னால ஆகாசம் விடியம்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே


ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

Thursday, September 29, 2022

Thiruchitrambalam - Megham Karukatha

 படம் : திருச்சிற்றம்பலம் (2022)

இசை : அனிருத்

பாடியவர்கள் : தனுஷ்

பாடல்வரிகள் : தனுஷ்






மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா

பெண்ணே பெண்ணே


தேகம் நனையாதா

பெண்ணே பெண்ணே

தீயும் அணையாதா

பெண்ணே பெண்ணே


கண் பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ப்யூசன் ஆகிறேன்

உள்ளுக்குள்ளே


பறக்க பறக்க துடிக்குதே

பழக பழக பிடிக்குதே

பழைய ரணங்கள் மறக்குதே

பெண் தோகை வருடுதே


பறக்க பறக்க...

பழக பழக...

பழைய ரணங்கள்...

பெண் தோகை வருடுதே


மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரால் அடிக்காதா

பெண்ணே பெண்ணே



மண்ணை தூறல் தீண்டும் முன்னே

வாசம் பார்க்கிறேன்

மண்ணை கூட பொம்மை ஆக்கும்

நேசம் பார்க்கிறேன்


இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

என்று கேட்கிறேன்

கொஞ்ச கொஞ்ச இன்னும் இன்னும்

என்று கேட்கிறேன்


என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்

காற்றில் போக பார்க்கிறேன்

கால்கள் போன பாதை எல்லாம்

நான் போகிறேன்



என்னுள்ளே மூடி இருந்த கதவு ஒன்று

வெட்கப்பட்டு திறக்கிறேன்

வாழ்க்கை போகும் போக்கிலெல்லாம்

நான் போகிறேன்


கண் பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ப்யூசன் ஆகிறேன்

உள்ளுக்குள்ளே


பறக்க பறக்க துடிக்குதே

பழக பழக பிடிக்குதே

பழைய ரணங்கள் மறக்குதே

பெண் தோகை வருடுதே


பறக்க பறக்க...

பழக பழக...

பழைய ரணங்கள்...

பெண் தோகை வருடுதே


மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா

பெண்ணே பெண்ணே

தேகம் நனையாதா

தீயும் அணையாதா

Viruman - Madura Veeran

 படம் : விருமன் (2022)

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா, அதிதி சங்கர்

பாடல்வரிகள் : ராஜு முருகன்



Download this MP3

ஏய்... மதுர வீரன் அழகுல

மாட்டு கொம்பு திமிருல

பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே...


வாடி என் கருப்பட்டி

பாத்தா பத்தும் தீப்பெட்டி

மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே...


மாருல ஏறிட எடம் தா

மீசைய நீவுற வரம் தா

உடுத்துற வேட்டிய போல

ஒட்டிகிட்டு வாழ போறேன்டா

உன் கூட வரேன்டா



தேனீ மொத்தம் பாக்கத்தான்

தங்கமே உன்ன தூக்கித்தான்

மொத்த தேனைத்தான்

நான் மொண்டு ஊத்தவா


ஊரே கண்ணு போடத்தான்

மாமன் ஒன்ன கூடித்தான்

புள்ளை நூறுதான்

நான் பெத்து போடவா


கொடை சாஞ்சேனே...

கொம்பன் நான்தானே

கொடமாக்கி கருவாச்சி

ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி...

ஒன் கூட வரேன்டி...

ஒன் கூட வரேன்டி...


மாமன் கண்ணு சூரியே

ஈர கொல ஏறியே

எதமா என்னை 

குத்திக் கொல்லாதே...


ஏ...எஹ்... ஹே...

ஆந்தை முழி காரியே

அருவாமனை மாரியே

சொகமா என்னை 

வெட்டி தள்ளாதே


ஹ்ம்ம்...ஒ...

சேலை முந்தி ஓரமா

ஆத்தா தந்த வாசமா

உள்ள காலம்தான் 

உன்ன நெஞ்சில் தாங்குவேன்


மாமன் நெஞ்சில் மேலதான்

ஆட்டுக்குட்டி போலத்தான்

நெத்தம் தூங்கத்தான்

பத்து ஜென்மம் வாங்குவேன்


எடி பேச்சியே... என்னை சாட்சியே

என்னை மாத்தி 

புதுசாக்கி உசுராக்கி 

ஒன் கையில் தாரேன்டி...

ஒன் கூட வரேன்டி...

நான் கூட வரேன்டி...

ஒன் கூட வரேன்டி...

நான் கூட வரேன்டி...


Viruman - Kanja Poovu Kannala

 படம் : விருமன் (2022)

இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், யுவன் சங்கர் ராஜா

பாடல்வரிகள் : கருமத்தூர் மணிமாறன்




Download this MP3

கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஒன் தட்டாங்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால


கருப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா


கருப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொங்கப்பானை ஒலையா


ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுறாயே கொலையா

ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுறாயே கொலையா


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால




அந்தி நடுச்சாமம் எழுப்பி

அந்த நட்சத்திரம் உலுப்பி

ஒன் மூக்குல காதுல

தோடா மாட்டி தொங்க விடப்போறேன்


அந்த ராத்திரிய கிள்ளி

கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி

ஒன் இமைய பூசும் கண்ணு மையா

மாத்திக்கொண்டு நானும் வாரேன்


மாடுக்குத்தி கிழிச்சாலும் 

பொழச்சுக்குவேன்டி

ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா 

என்ன செய்யுவேன்டி


சூரிக்கத்தி வீசுனாலும்

நிமிந்து நிப்பேன்டி

ஒன் சுண்டு விரல் பட்டு போனா

சுணங்கி போவேன்டி


நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி

நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்

திண்டு செமிப்பேன்டி


கஞ்சா பூவு கண்ணால

செப்பு செல உன்னால

இடுப்பு வேட்டி அவுருதடி

நீ சிரிச்சா தன்னால


ஒன் தட்டாங்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூரியனையும் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால


Thursday, June 9, 2022

Thithikkuthdhe - Thayarum Ariyamal

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்

பாடல்வரிகள் : வைரமுத்து


Download this MP3


ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஆஆ...

ஆஆஆ... ஆஹா... ஆஆஆஆ...

தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்

மொட்டொன்று பட்டென்று மலரும்

என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்

பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்


பயம் போக சீராட்டி பாலூட்டி நீராட்டி

திருமேனி மருதாணி இடுக

உளுந்தாலே களி செய்து வெல்ல‌ங்கள் தானிட்டு

நல்லெண்ணெய் தான் விட்டு தருக

பொன்னோடு சீர்கொண்டு வருக

இந்த பூவுக்கு புது சேலை புனைக

பொன்னோடு சீர்கொண்டு வருக

இந்த பூவுக்கு புது சேலை புனைக

இயறக்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூப்பெய்து

வண்ணமலர் குல‌ம் வாழ வாழ்க வாழ்க


தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்

மொட்டொன்று பட்டென்று மலரும்

என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்

பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்


Thithikudhe - Mainaave Mainaave

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்

பாடல்வரிகள் : வைரமுத்து


Download this MP3


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா 

ஹே மைனாவே மைனாவே என் கண்கள்

பூமியில் தேடிய தேடல் நீதானா

விண்மீனாய் தொலைந்த மகள்

வெண் நிலவாய் வந்தாளா

தேடியவன் கைகளிலே 

தேவதையாய் விழுந்தாளா

பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் 

வாழ்வோம் வாழ்வோம் என்றாளா


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா

மைனாவே மைனாவே என் கண்கள்

பூமியில் தேடிய தேடல் நீ...தானா



நீ போன காலம் தொட்டு 

என் வாழ்வில் பகலே இல்லை

இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்


திசைக்கொன்றாய் தேடி செல்ல 

விழி நான்கு இல்லை என்று 

கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்


பிரிந்தோம் அன்று துளியாக

இணைந்தோம் இன்று நதியாக


நீரின் தாகம் நீரால் தீர்ந்தது


ஆஆ ஆஆ 

மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா



 


சில்லென்ற முத்தம் ஒன்று 

செல் எல்லாம் நனையும்போது

உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே


தேரோடு பூவனம் ஒன்று 

மாரோடு சரியும்போது

அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே


தேகம் ரெண்டும் பிரியாதா

ஜீவன் எரியும் சுடராக


முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம்


ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..........


மைனாவே மைனாவே என் கனவில்

தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா 


ஆஆ...

மைனாவே மைனாவே என் கண்கள்

பூமியில் தேடிய தேடல் நீதானா


விண்மீனாய் தொலைந்த மகள் 

வெண் நிலவாய் வந்தாளா

தேடியவன் கைகளிலே 

தேவதையாய் விழுந்தாளா

பிரிவுக்கும் சேர்த்து இனிமேல் 

வாழ்வோம் வாழ்வோம் என்றாளா


Wednesday, May 25, 2022

Thithikkuthdhe - Oru Nimidama

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : திப்பு, ஸ்ரீவர்தினி

பாடல்வரிகள் : வைரமுத்து




ஒரு நிமிடமா... ஒரு நிமிடமா...

ஒருநிமிடமா... தவறிவிட்டேன்

ஒருஜென்மமே... ஒரு ஜென்மமே...

ஒருஜென்மமே... இழந்துவிட்டேன்

அன்பே... அன்பே... எங்கே...


பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா

காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா

கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா

நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா


ஒரு நிமிடமா ஒரு நிமிடமா

ஒரு நிமிடமா தவறிவிட்டேன்

ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே 

ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்

அன்பே... அன்பே... எங்கே...

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா




நிலா வந்து போனதற்கு 

வான்வெளியில் சாட்சியில்லை

ஆனாலும் பூமியிலே 

அல்லியெல்லாம் சாட்சிசொல்லும்

நீ வந்து போனதற்கு 

சாட்சி சொல்ல யாருமில்லை

ஆனாலும் மலையெல்லாம் 

அசையாமல் சாட்சி சொல்லும்


இளம்பிறையாகப் பார்த்தவளே 

இப்போதெப்படி இருப்பாயோ

அங்கம் கொழித்து திமிறும் அழகில் 

அடையாளங்கள் தொலைத்தாயோ

இளம்பிறையாகப் பார்த்தவளே 

இப்போதெப்படி இருப்பாயோ

அங்கம் கொழித்து திமிறும் அழகில் 

அடையாளங்கள் தொலைத்தாயோ

உதட்டில் ஒட்டிய புன்னகை மட்டும் 

உடைந்து விடாமல் இருப்பாயோ

அன்பே... அன்பே... எங்கே...

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா



பூப்போல மலர்ந்துவிட்டேன் 

வாழ்வில் ஏதும் மாசமில்லை

கண்ணா உன்னை கண்டுகொண்டால் 

கண்கள் மீண்டும் தேவையில்லை


மறுமுறை என்னைப் பார்க்கையிலே 

மார்பில் புதைந்து அழுவாயோ

வெட்கம் தடவிய புன்னகையாலே 

விவகாரங்கள் செய்வாயோ

மறுமுறை என்னைப் பார்க்கையிலே 

மார்பில் புதைந்து அழுவாயோ

வெட்கம் தடவிய புன்னகையாலே 

விவகாரங்கள் செய்வாயோ

இலையில் சிக்கிய மழையைப்போலே 

என்னைத்தொடாமல்  தவிப்பாயோ

அன்பே... அன்பே... எங்கே...

பள்ளித்தோழியே வந்து போனாயா

பாவாடைப்பூவே வந்து போனாயா

காற்றெல்லாம் உன் வாசம் வந்து போனாயா

கரையெல்லாம் உன் தடங்கள் வந்து போனாயா

நதியெல்லாம் உன் கொழுசு வந்து போனாயா


ஒரு நிமிடமா ஒரு நிமிடமா

ஒரு நிமிடமா தவறிவிட்டேன்

ஒரு ஜென்மமே ஒரு ஜென்மமே 

ஒரு ஜென்மமே இழந்துவிட்டேன்



Popular Posts