Showing posts with label G.V.Prakash. Show all posts
Showing posts with label G.V.Prakash. Show all posts

Monday, January 17, 2022

Bachelor - Adiye

படம்: பேச்சுலர் (2021)

இசை : திபு நினன் தாமஸ்

பாடியவர்கள் : கபில் கபிலன்

பாடல்வரிகள்: GKB





அடியே நீதானடி

என் போதை தேனே

முத்தம் கொஞ்சு


சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

கொஞ்சம் நில்லு


பெண்ணே பெண்ணே

உந்தன் கையில் நானும்

கூடும் நேரம் விட்டு செல்லாதே


கண்ணே கண்ணே

நீளும் காலம் வேண்டும்

வாராயோ அருகிலே


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே




இரவுகள் நீள இமைகளும் மூட

இடைவெளி ஏனோ கண்மணியே

யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி

முத்தங்களை தின்போம் அடியே


சாளரத்தின் வெளிச்சத்திலே

அரும்புகிறேன்

மெய் கடலின் அலைகளிலே

சுழலுதே கவிழுதே மனமதுவே


அடியே நீதானடி

என் போதை தேனே

முத்தம் கொஞ்சு


சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

கொஞ்சம் நில்லு


பெண்ணே பெண்ணே

உந்தன் கையில் நானும்

கூடும் நேரம் என்னை விட்டு செல்லாதே


கண்ணே கண்ணே

நீளும் காலம் வேண்டும்

வாராயோ அருகிலே அடியே........


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே ஹே...

Sunday, September 19, 2021

Soorarai Pottru - Kayilae Aagasam

படம்: சூரரை போற்று (2020)

இசை : G.V. பிரகாஷ் குமார்

பாடியவர்கள் : சைந்தவி

பாடல்வரிகள்: யுகபாரதி




கையிலே ஆகாசம்

கொண்டு வந்த உன் பாசம்

காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா


கண்ணிலே நீராட

காஞ்ச நெலம் போராட

பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா


தூந்திருந்த கேணிலும்

பால் சுரக்க கூடும்மையா

தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ


உச்சி வெயில் வேளையிலே

உந்த வரம் தூறல் ஒன்னு

தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ


கையிலே ஆகாசம்

கொண்டு வந்த உன் பாசம்

காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா


கண்ணிலே நீராட

காஞ்ச நெலம் போராட

பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா



அன்னத்த தட்டுல வெச்சு

அம்புலிய காட்டி நின்ன

தாயுமே நினவு நெருங்க

பொறந்தது காலம்…..

கன்னத்துல கைய வெச்சு

காத்திருந்த சனகளும்தான்

பல்லக்கில ஏறி போக

மறஞ்சது சோகம்

பல்லக்கில ஏறி போக

மறஞ்சது சோகம்


தண்டட்டியில் காகங்கள

ஓட்டி நின்ன பாட்டிகளும்

தட்டான சுத்தி வர தாங்கல லூட்டி

கிட்டடியில் மேகங்கள

தொட்டு விடும் ஏக்கத்தில

கட்டான் தரைகளுமே போடுது போட்டி


ஏ நானா னே னா னே…..நானானா நானானே……….

நானா னே னா னே…..நானே நானே னா நானேனே……….

Friday, July 9, 2021

Jail - Kaathodu Kaathanen

படம்: ஜெயில் (2020)

இசை: G.V. பிரகாஷ்

பாடியவர்கள்: தனுஷ், அதிதிராவ் ஹதரி

பாடல்வரிகள்: கபிலன்





ஓ பெண்ணே... ஓ பெண்ணே

நீதானே நீதானே...

ஓ பெண்ணே... ஓ பெண்ணே

நீதானே நீதானே...


காத்தோடு காத்தானேன்

கண்ணே உன் மூச்சானேன்

நீரோடு நீரானேன்

உன்கூட மீனானேன்


காகிதம் போலே ஒன்மேல

ஓவியம் வரையும் நகமானேன்

மோகத்தில் பெண்ணே உன்னாலே

முத்தங்கள் வாழும் முகமானேன்


இலை மறைவில் மலர்ந்திருந்தோம்

மழை துளியாய் கலந்திருந்தோம்


காத்தோடு காத்தானேன்

கண்ணே உன் மூச்சானேன்

நீரோடு நீரானேன்

உன்கூட மீனானேன்



நானனா நானனா 

நானனா நானனா

நானனா... நானனா...

நானனா...



இலையில் மலரின் கைரேகை

இமைகள் யாவும் மயில் தோகை


ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்

ஆனந்த வன்மம் மறவேனே


மழலை போலவே மடியில் தவழ்ந்த

மயக்கம் தீரவே இல்லை


இரண்டு பேருமே இனிமேல் யாரோ

இறைவன் கைகளில் பிள்ளை


கண்மணி பூ பூக்க

காதல் விதையானோம்


காமன் நாட்குறிப்பில்

காதல் கதையானோம்... ஓ....

காத்தோடு காத்தானேன்

கண்ணே உன் மூச்சானேன்

நீரோடு நீரானேன்

உன்கூட மீனானேன்



பூவின் மீது கூத்தாடும்

போதை வண்டு போலானேன்


புல்லின் மீது பூமியைப் போல்

உந்தன் பாரம் நான் கண்டேன்


இதழின் ஆற்றிலே குதிக்கும் போது

கரைகள் என்பதே இல்லை


கரைகள் இல்லை பரவாயில்லை

கடலே காதலின் எல்லை



வேர்வை துளிகளிலே 

என்னை நனைத்தாயே

இதயம் நொறுங்கத்தான் 

இறுக்கி அணைத்தாயே


காத்தோடு காத்தானேன்

கண்ணே உன் மூச்சானேன்

நீரோடு நீரானேன்

உன்கூட மீனானேன்


ஆயிரம் ஆசைகள் தாலாட்ட

உன் மார்பினில் மெல்ல விழுந்தேனே

விழிகள் மூடியே நடந்ததெல்லாம்

கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

இலை மறைவில் மலர்ந்திருந்தோம்

மழை துளியாய் கலந்திருந்தோம்


Sunday, March 22, 2020

Asuran - Kathari Poovazhagi

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா
பாடல்வரிகள் : K.ஏகாதேசி 


Image result for Asuran



தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...

கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...



மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே

காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே

கழுதை போலத்தான் அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும்
அருவா போல நீ மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான்

ஹேய்... கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு

ஹான்... ஹான்... ஆன்...
வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே..


கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு

நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி



Asuran - Blood Bath

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : அருண்ராஜா காமராஜ் & குழுவினர் 
பாடல்வரிகள் : அருண்ராஜா காமராஜ் 


Image result for Asuran



வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

அச்சம் துறந்திடு துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம் என்னவென்பதை
உந்தன் கைகளில் ஏந்தி நிற்கிறாய்
அந்த ஆயுதம் என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு

வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க



ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேத பார்வை வேர்வை போல
ஊறி போன உலகிது

இறுகி போன மனமிது
இளகி போக மறுக்குது
பழகி பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது

ஓலம் பரவிடும் அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு துன்ப மேகம் பொழியுது
ஏற்க மறுத்திடு துரோக தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த மீதி வாளை வீசிடு

வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க



குருதி தாகம் அடிக்குது
பலியை தீர்க்க துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது

எதுக்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்

நீதி எதுவென இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு
வீதி வெளியிலே உந்தன் கோபம் காட்டிடு
மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாற்றிடு

வா அசுரா வா அசுரா வா
அசுர தலைகள் சிதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பகைகள் கதற

வா அசுரா வா அசுரா வா
அசுர பலிகள் கொடுக்க
வா அசுரா வா அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க

Asuran - Kannazhagu Rathiname

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : தனுஷ்
பாடல்வரிகள் : யுகபாரதி 


Image result for Asuran



கண்ணழகு ரத்தினமே
கை அசையும் பொற்சிலையே
காணலையே கண்ணே
உன்ன காணலையே

கையும் காலும்
உன்ன எண்ணி ஓடலையே
பொன்னழகு பெட்டகமே
பூ முடிஞ்ச கட்டடமே
காணலையே தங்கம்
உன்ன காணலையே
ஆடும் மாடும்
உன்ன எண்ணி மேயலையே

Asuran - Polladha Boomi

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : தனுஷ், G.V.பிரகாஷ் குமார், கென் கருணாஸ், டி ஜே
பாடல்வரிகள் : K.ஏகாதேசி 


Image result for Asuran



பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு

வீராப்புத்தான் வேணாம்மய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக

உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து


ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே

ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
என்கூட மோத வர சொல்லு

ஆத்தாடி என் மவன் தானே அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும் கலங்காத வீரன்
கொம்பேறி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் என் பாட்டு
கும்மாளாம் போட நானும்
சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்

உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து

Thursday, March 19, 2020

Asuran - Ellu Vaya Pookalaye

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : சைந்தவி
பாடல்வரிகள் : யுகபாரதி


Image result for Asuran




எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட ஒன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம்
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு
மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா


வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ
அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ

உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ
காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

Sunday, March 15, 2020

Uzhavan - Maari Mazhai Peiyadho

படம் : உழவன் (1993)
இசை : A.R..ரஹ்மான்
பாடியவர் : சாகுல் ஹமீது, G.V.பிரகாஷ், சுஜாதா
பாடல் வரிகள் : வாலி


Image result for Uzhavan



கமலத்தண்ணி இறக்கு மச்சான்
ஏரப்பூட்டி உழுது வச்சான்
வித்துநெல்ல எடுத்து வச்சான்
விதைக்க நாளு காத்திருந்தான்
மாரி மழை பெய்யாதோ...
மக்க பஞ்சம் தீராதோ...

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் 
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் 
சோலைதான் இங்கில்லையே

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற


சட்டியில மாக்கரச்சு சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை கோடமழை பெய்யாதோ
வானத்து ராசாவே மழை திருப்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ சார மழை பெய்யாதோ

வடக்கே மழை பெய்ய 
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்
கிழக்கே மழை பெய்ய 
கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்
நல்ல நெல்லு கதிரறுத்து புள்ள 
நெளி நெளியா கட்டு கட்டி
அவ கட்டு கட்டி போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற


வரப்புல பொண்ணிருக்கு 
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய நீ எப்போ புடிப்ப

வெதை எல்லாம் செடியாகி 
செடியெல்லாம் காயாகி
காய வித்து உன் கையா புடிப்பேன்
புது தண்டட்டி போட்ட புள்ள 
சும்மா தலதலன்னு வளந்த புள்ள
ராத்தவலையெல்லாம் குலவை இட 
நான் தாமரை உன் மடி மேல

கனவுகள் பலிக்கணும் 
கழனியும் செழிக்கனும் வானம் கரு கருக்க

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற
மயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும் 
வானம் கருக்கலையே
குயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும் 
சோலைதான் இங்கில்லையே
மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

மாரி மழை பெய்யாதோ மக்க பஞ்சம் தீர
சார மழை பெய்யாதோ சனங்க பஞ்சம் மாற

Uzhavan - Kaathu Kaathu Dinam

படம் : உழவன் (1993)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : K.S.சித்ரா, G.V.பிரகாஷ்
பாடல் வரிகள் : வாலி


Image result for Uzhavan



மொட்டவிழ்ந்த புது பூக்கள் ஒரு மெட்டெடுத்து இசை பாட
சொட்டுகின்ற புது தேனி இள வண்டு வந்து விளையாட

காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து புது பாட்டும் வந்தாச்சு
காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
தொடுவானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்

காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து புது பாட்டும் வந்தாச்சு


மொட்டு... பொன்னந்தி நேரம் பூவாவது
பூவு... பின்னாளில் நூறு பிஞ்சாவது
பிஞ்சு... மெல்லத்தான் முத்தி காயாவது
காய்... தித்திக்கும் நல்ல கனியாவது
நான் போட்ட தோட்டங்கள் பிள்ளைகள் கூட்டங்கள்
பூவாகி பிஞ்சாகி காயாகி, கனியாகி
நானொரு தென்றல் என்று பாடிடும் பாடல் ஒன்று
காலை மாலை இனிமையே

காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து புது பாட்டும் வந்தாச்சு

காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
தொடுவானம் தொட போகும் போது தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்


வானம்... புதுவானம் 
அது எப்போதும் எல்லைகள் இல்லாதது
பூமி.... புதுபூமி 
அது எந்நாளும் நம் கையில் உண்டாவது
முள்ளென கல்லென்ன நீ தொட்டு பூவாகும்
சொல்கின்ற சொல்லெல்லாம் நீ சொல்ல பொன்னாகும்
நிலவுக்கு பாதை போடு நீயங்கு வீடு கட்டு
வா... வா... போவோம் பயணம்

காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து புது பாட்டும் வந்தாச்சு

காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
தொடுவானம் தொட போகும்போது தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும் காலம் வந்து சேரும்

காத்து காத்து தினம் காத்து புது காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து புது பாட்டும் வந்தாச்சு

Saturday, February 2, 2019

Sarvam Thaalamayam - Dingu Dongu

படம்: சர்வம் தாளமயம் (2019)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : பாம்பா பாக்யா & அந்தோணி தாசன்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்

Image result for Sarvam Thaala Mayam



எப்போ வருமோ எங்க காலம்
எப்போ வரும்…ம்ம்ம்ம்

எப்போ வருமோ எங்க காலம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

தப்பு கொட்டும் போதும்
உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில் 
எல்லாமே ஆடிவிடும்

டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்



விதைக்கிற கை எல்லாம்
சேத்துலதான் முக்கனுமே
சோத்துல கை வைக்க
வரிசையிலே நிக்கனுமே

கெடைக்குற தோலுலதான்
அடிக்கிற வாத்தியத்த
படைக்கிற கைகளுக்கு
இசைக்கிற ஞானம் உண்டு

எங்க வாழ்வோடும்
இசையோடும் நாதம் உண்டு...
நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல
ஊரே சேர்ந்து கேட்டாச்சு

டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

தப்பு கொட்டும் போதும்
உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில் 
எல்லாமே ஆடிவிடும்

டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்

Popular Posts