Showing posts with label Madhubala. Show all posts
Showing posts with label Madhubala. Show all posts

Monday, January 21, 2019

Panchalankurichi - Un Uthattora

படம் : பாஞ்சாலங்குறிச்சி  (1996)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for panchalankurichi tamil movie



தன நானா நானே நா நா 
தன நானா நானே த‌னனானே நா நா

உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி 
கடனா கேட்கும் கடனா கேட்கும்
நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து 
உளவு பார்க்கும் உளவு பார்க்கும்
என் செவ்வாழை தண்டே...
என் செவ்வாழை தண்டே சிறு காட்டுவண்டே 
உன்ன நெனச்சு தான் எச பாட்டு 
கொஞ்சம் நெருங்கிவா இத கேட்டு

ஆஆஆ... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆஆ... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆஆ...


ஏன் மம்முதா அம்புக்கு ஏன்
இன்னும் தாமசம் ஆஆஆ...

அடியே அம்மணி வில்லு இல்ல 
இப்போ கைவசம் ஆஆஆ...

ஏன் மல்லு வேட்டி மாமா 
மனசிருந்தா மார்க்கம் இருக்குது

என்னை பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது



முருகமலை காட்டுக்குள்ள 
விறகு எடுக்கும் வேளையில
தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா

பட்ட விறக தூக்கிவிட்டா 
கட்ட விரலு பட்டுபுட்டா 
விறகில்லாம தீ புடிக்கும் 
வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவத தொட்டுக்க
சொந்தத்துல வரைமுறை இருக்கா

நீ பொம்பள தானே 
உனக்கு அது நியாபகம் இருக்கா

உன் நெனப்பு தான் 
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆஆஆ....

அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது



சிங்கம் புலி கரடி கண்டா 
சேர்த்தடிக்க கை துடிக்கும் 
பொட்டு கன்னி உன்ன கண்டா 
புலி கூட தொட நடுங்கும்

உம்ம நெனச்சு பூசையில 
வேப்பெண்ணையும் நெய் மணக்கும் 
நீ குளிச்ச ஓடையில 
நான் குளிச்சா பூ மணக்கும்

ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே 
என்னை ஏன் தூக்கி சுமக்குற

என் மனசுக்குள் புகுந்து 
ஏன் மச்சான் இறங்க மறுக்குற

அடி என் நெஞ்சிலே
ஏன்டியம்மா வத்தி வைக்குற

உன் ஆசைய எதுக்கு 
இன்னும் பொத்தி வைக்குற 

Sunday, September 16, 2018

Iruvar - Narumugaye Narumugaye

படம்: இருவர் (1997)
இசை: A.R ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ
பாடல்வரிகள்: வைரமுத்து




நறுமுகையே நறுமுகையே 
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து 
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா

திருமகனே திருமகனே 
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில் 
கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா


மங்கை மான்விழி அம்புகள் 
என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் 
என் மார்துளைத்ததென்ன

பாண்டி நாடனைக் கண்டு 
என் மனம் பசலை கொண்டதென்ன

நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை

நறுமுகையே நறுமுகையே 
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து 
நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில் 
கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா

அற்றைத் திங்கள் அந்நிலவில் 
நெற்றித்தரள நீர்வடிய 
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா


யாயும் யாயும் யாராகியரோ
நெஞ்சில் நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ
நெஞ்சில் நேர்ந்ததென்ன

யானும் நீயும் எவ்வழியறிதும் 
உறவு சேர்ந்ததென்ன

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் 
உயிர்க்கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் 
உயிர்க்கொடி பூத்ததென்ன

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் 
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன

Thursday, September 6, 2018

Roja - Chinna Chinna Aasai

படம்: ரோஜா (1992)
இசை: A.R.ரஹ்மான் 
பாடியவர்கள்: மின்மினி
பாடல்வரிகள்: வைரமுத்து




சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை


மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை


சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை
சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை

Sunday, July 8, 2018

Vaaname Ellai - Jana Gana Mana

ப‌டம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து




ஆஆ... ஆஆஆஆ ஆஆ ஆஆ...
ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம் ம்ம் ம்ம்...
தன்னன்னன்ன தனானானா
தன்னன்னன்ன தனானானா
தனா... நன‌னா...
தனா தனா... நன‌னா
தன்னனனனா.... 
தன்னனனனா.... 
தன்ன நனனா நனனா... நனனனனா...

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...
முடியும் நிகழ்ச்சி ஆஹா... மனதில் மகிழ்ச்சி...
துள்ளி எழவேண்டும்... ஏன் அழவேண்டும்...
இந்த பூமிக்கு நன்றிசொல்லி புறப்பட வேண்டும்...
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால்
தாங்காது தாங்காது பூலோகம் என்னாவது
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது அப்போது என்செய்வது

காலம் வந்தால் எதுவும் இங்கு நடக்கும்...
நேரம் வந்தால் பறவை ரக்கை துடிக்கும்...

கிழக்கு வானம் அழைக்கும் நேரம்...
கிளிகள் கூட்டம் பறக்கட்டும்...
கீதங்கள் இசைக்கட்டும்...
திசை எங்கே அதோ அங்கே... அங்கே...
இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை...
இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்கை... 

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


மழையின் துளிகள் மண்ணோடு வீழ்ந்தால்
மழைக்கொண்ட சாவென்று வான்மேகம்தான் சொல்லுமா

நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று கடலென்ன தடைசொல்லுமா

சங்கமிக்க இயற்கை கற்றுத்தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம் 

ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே... அதோ அங்கே... அங்கே...
இதில் தலை எங்கே... அட வால் எங்கே...
இந்த கேள்விக்கு விடை சொல்லும் ஞானிகள் எங்கே...

Sunday, December 2, 2012

Vaaname Ellai - Nee Andavana

படம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து






நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத புது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே

ம்..ம்ம்ம்ம்..

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்


நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே


ஆரோ... ஆரோ... ஆரோ... ஆராராரோ...
ஆரோ... ஆரோ... ஆரோ... ஆரீராரோ...

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே
வான்வெளியில் தாலாட்டுதே
கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே
சூரியனை தாலாட்டுதே

ஆ... ஆஆஆஆ...

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்
நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
முள்ளென்பது ரோஜாவி்ல் உறவா பகையா
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது


நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

Monday, August 15, 2011

Roja - Thamizha Thamizha

படம் : ரோஜா (1992)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன்
பாடல் வரி : வைரமுத்து






தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்... எழு வா

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது
சுப தந்தமாய் வலுவானது
அட மானிடா இதை வெல்வது
இம்மண்ணிலா பிரிவென்பது... எழுவோம்


Wednesday, July 13, 2011

Panchalankurichi - Aathoram

படம் : பாஞ்சாலங்குறிச்சி (1996)
இசை : தேவா
பாடியவர் : சொர்ணலதா
பாடலாசிரியர் : வைரமுத்து

Image result for Panchalankurichi




ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்
கனகாம்பரம் எடுத்து கையால நீ தொடுத்து 
பின்னால வச்சிவிட ஆசை வச்சேன்
மரியாதை இல்லாம மச்சானே உன்னை பேசி 
மாரோட மல்லுக்கட்ட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

மாரளவு தண்ணியில மஞ்ச தேய்ச்சு நான் குளிக்க
மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆசை வச்சேன்
பசுவப்போல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து
குசும்பு பண்ண வேணுமின்னு ஆசை வச்சேன்
உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில
கண்டாங்கி வாங்கித்தர ஆசை வச்சேன்
குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு 
மடி மேல காலைப்போட ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்

மேகாட்டு மூலையில மேகம் கருக்கையிலே
சுக்குத்தண்ணி வச்சித்தர ஆசை வச்சேன்
மச்சும் குளிருகிற மார்கழி மாசத்துல
மச்சானை தொட்டுத்தூங்க ஆசை வச்சேன்
மாமன் கட்டும் வேட்டியில மஞ்சக்கறை என்னதுன்னு
மந்தையில நின்னு சொல்ல ஆசை வச்சேன்
ரெட்டிகுளம் ஆசாரிக்கு பொட்டியில பணம் கொடுத்து
ரெட்டைத்தொட்டில் செய்யச்சொல்ல ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

அத்தானின் இடுப்புக்கு
அண்ணாக்கயிறு கட்ட ஆசை வச்சேன்
நறுக்கான தேகத்துக்கு
நல்லெண்ணெய் தேய்சுவிட ஆசை வச்சேன்
வெந்நீரை கொதிக்க வச்சு மச்சானை குளிக்க வச்சு
மாராப்பு நனையத்தானே ஆசை வச்சேன்
மாந்தோப்பில் கட்டிலிட்டு மனம் போல தொட்டுத்தொட்டு
மாமன் கூட பேசிடத்தான் ஆசை வச்சேன்
அத்தனையும் பொய்யாச்சு ராசா
ஒத்தையில நிக்குதிந்த ரோசா

ஆத்தோரம் தோப்புக்குள்ள
அத்தானை சந்திக்கத்தான் ஆசை வச்சேன்
ஆளான சேதி சொல்லி
அடையாளம் காட்டத்தானே ஆசை வச்சேன்

Sunday, July 10, 2011

Mr.ரோமியோ - தண்ணீரை காதலிக்கும்

படம் : Mr.ரோமியோ (1996)
இசை : இளையராஜா
பாடியவர் : 
சங்கீதா, சாஜீத்
பாடல் வரி : வைரமுத்து








தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான் காதலிக்கும் கள்ன் பேரு ரோமியோ
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை


மன்மதனை பார்த்தவுடன்
மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பகலில் தூங்கி விட சொல்வேன்
இரவில் விழிதிருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை


சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ன் பேரு ரோமியோ

Popular Posts