Showing posts with label Anand Babu. Show all posts
Showing posts with label Anand Babu. Show all posts

Sunday, July 22, 2018

Cheran Pandiyan - Kathal Kaditham

படம்: சேரன் பாண்டியன் (1991)
இசை: சௌந்தர்யன்
பாடியவர்கள்: S.A ராஜ்குமார், ஸ்வர்ணலதா
பாடல்வரிகள்: சௌந்தர்யன்


Related image



காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே


உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்

வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழ வேண்டுமே

உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா


பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு

வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்

உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு

வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

Sunday, July 8, 2018

Vaaname Ellai - Jana Gana Mana

ப‌டம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து




ஆஆ... ஆஆஆஆ ஆஆ ஆஆ...
ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம் ம்ம் ம்ம்...
தன்னன்னன்ன தனானானா
தன்னன்னன்ன தனானானா
தனா... நன‌னா...
தனா தனா... நன‌னா
தன்னனனனா.... 
தன்னனனனா.... 
தன்ன நனனா நனனா... நனனனனா...

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...
முடியும் நிகழ்ச்சி ஆஹா... மனதில் மகிழ்ச்சி...
துள்ளி எழவேண்டும்... ஏன் அழவேண்டும்...
இந்த பூமிக்கு நன்றிசொல்லி புறப்பட வேண்டும்...
ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


ஜனிக்கும் உயிர்கள் சாகாமல் போனால்
தாங்காது தாங்காது பூலோகம் என்னாவது
சுழலும் பூமி சுற்றாது சாமி
சுவாசிக்க முடியாது அப்போது என்செய்வது

காலம் வந்தால் எதுவும் இங்கு நடக்கும்...
நேரம் வந்தால் பறவை ரக்கை துடிக்கும்...

கிழக்கு வானம் அழைக்கும் நேரம்...
கிளிகள் கூட்டம் பறக்கட்டும்...
கீதங்கள் இசைக்கட்டும்...
திசை எங்கே அதோ அங்கே... அங்கே...
இந்த தரை வாழ்க்கை வெறும் சிறை வாழ்க்கை...
இந்த சிறைப்பட்ட சிலந்திக்கு விடுதலை வேட்கை... 

ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்...
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்...


மழையின் துளிகள் மண்ணோடு வீழ்ந்தால்
மழைக்கொண்ட சாவென்று வான்மேகம்தான் சொல்லுமா

நகரும் நதிகள் கடலோடு சேர்ந்தால்
நதிகொண்ட சாவென்று கடலென்ன தடைசொல்லுமா

சங்கமிக்க இயற்கை கற்றுத்தந்தது
சங்கமத்தால் உலகம் இன்னும் உள்ளது
பள்ளத்தில் சேரும் வெள்ளத்தைப் போலே
இயற்கையோடு கலக்கலாம் 

ஜகத்தையே ஜெயிக்கலாம்
திசை எங்கே... அதோ அங்கே... அங்கே...
இதில் தலை எங்கே... அட வால் எங்கே...
இந்த கேள்விக்கு விடை சொல்லும் ஞானிகள் எங்கே...

Sunday, December 2, 2012

Vaaname Ellai - Nee Andavana

படம்: வானமே எல்லை (1991)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து






நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே
கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

தாய் பாஷை அறியாத புது இந்தியன்
நீ என்றால் பொய்யில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய்
உன் போலே ஊரில்லையே

ம்..ம்ம்ம்ம்..

இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய்
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே
பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும்
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய்விடும்


நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே


ஆரோ... ஆரோ... ஆரோ... ஆராராரோ...
ஆரோ... ஆரோ... ஆரோ... ஆரீராரோ...

கலைகின்ற மேகங்கள் சபை கூடியே
வான்வெளியில் தாலாட்டுதே
கரைகின்ற பிறை ஐந்து கை வீசியே
சூரியனை தாலாட்டுதே

ஆ... ஆஆஆஆ...

முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில்
நீ என்பது எம் வாழ்வில் வரவா செலவா
முள்ளென்பது ரோஜாவி்ல் உறவா பகையா
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது


நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே எனக்கில்லையே

கண்ணீர் என்ன கண்ணா அட நானுன் மாமனே

மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே

Popular Posts