Sunday, December 2, 2018

Thiruvilayadal Aarambam - Theriyama Parthu

படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D.இமான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுஜாதா
பாடல்வரிகள் : விவேகா

Image result for Thiruvilaiyaadal Aarambam



தெரியாம பாத்துபுட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்

ஓ... ஓஓ...
தெரியாம பாத்துபுட்டேன்
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 
என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்
தொல்லையா ஆச்சுடி தூக்கமே போச்சுடி

தெரியாம பாத்து புட்டேன்
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 
என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்
தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

தெரியாம

உன்ன தெரிஞ்சே தான்



ஹிட்லர் போல உங்க அண்ணன் 
இம்சை பண்ணுறானே என்னை

ரொம்ப பாசம்தான் என் மேலதான்
அவன் உயிரே நான்தான் தெரியுமா 
அத சொன்னா உனக்கு புரியுமா

சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம் 
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்

கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தச்சா 
காட்ட கொளுத்துவான்

ஹையோ... ஹையோ...

தெரியாம பாத்து புட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 



காதல் என்பதொரு கோட்டை 
அந்த கதவு திறந்துட்டா வேட்டை

உள்ள போவோமா வெல்லம் கசக்குமா 
நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி

வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும்

உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா
காதலுன்னா ஏன்டி வெறுப்பா
என் மேல தான் கைய வெச்சா
சங்க அறுப்பேன்டி

ஹையோ... ஹையோ...

தெரியாம பாத்து புட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 

என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்

தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

தெரியாம

உன்ன தெரிஞ்சே தான்

ஹையோ... ஹையோ...

Thiruvilaiyaadal Aarambam - Madurai Jilla

படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D. இமான்
பாடியவர்கள் : கார்த்திக், கல்பனா
பாடல்வரிகள் : விவேகா

Image result for Thiruvilaiyaadal Aarambam



மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்பகுளமா
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா

உளராத உளராத உத வாங்கி அழபோற

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ உம் சொன்னா வூட்டுகாரன்

பூச்சாண்டி காட்டாதடா 
உன் பொண்டாட்டி நான் இல்லடா

மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா


பாராசூட்டில் ஏறி வந்து பாபேன்டி
நீ வீட்டில் குளிச்சா

பாக்கும் ரெண்டு கண்ணும் காலி
நீ சொன்ன வார்த்தை தான் பழிச்சா

கூரைய பிரிச்சு குதிப்பேன்டி
உன்ன எலுமிச்சம் போல உரிபேன்டி

கை கால சேர்த்து முறிப்பேன்டா
சொத்து கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா

மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொல்லாதடி

கோவத்த கிளறாதடா
என்ன கொலைகாரி ஆக்காதடா

மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா



காலியான கழுத்தோட வா
தாலியோட நானும் வருவேன்

தாலி வந்தா வேலி இல்ல
தாராளமா என்னை தருவேன்

கையால செஞ்ச உடம்பாடி
இரு கையால புடிப்பேன் உடும்பாடி

வாயால சும்மா பசப்பாத
என் வயசதான் வெடியாக்கி கொளுத்தாத

நான் தான்டி வேலைக்காரன்
உன்ன அலுங்காம ஆள போறேன்

இப்போது முத்தம் தாரேன்
இருறா பின்னாடி மொத்தம் தாரேன்

மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்பகுளமா
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா

உளராத உளராத உத வாங்கி அழபோற

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ உம் சொன்னா வூட்டுகாரன்

பூச்சாண்டி காட்டாதடா 
உன் பொண்டாட்டி நான் இல்லடா 

Tuesday, November 27, 2018

Pizza - Mogathirai

படம் : பீட்சா (2012)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : பிரதீப் விஜய்
பாடல்வரிகள் : கபிலன்

Image result for pizza tamil movie



உன் உயிர் அதன் இசை
தேன் தரும் பூவின் நிழலோ

மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்



இமை விரல்களில் காற்றாய் கை வீசு
மலர் படுக்கையில் மெளனம் நீ பேசு காதலே
தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு
இடைவெளியினில் என்னை நீ பூட்டு காதலே 

தீண்டும் தினம் தென்றல் மணம்
கூந்தல் இழை வெந்நீர் மழை
உன் காதலால் என்னுள் நூறு கனா
உன் உயிர் அதன் இசை
தேன் தரும் பூவின் நிழலோ

மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம் பிறை
மூங்கில் மரம் முத்தம் தரும்

மேகம் இவன் தூரல் இவள்
நாட்கள் இவன் நேரம் இவள்
காற்று இவன் வாசம் இவள்
வார்த்தை இவன் அர்த்தம் இவள்


Monday, November 26, 2018

Nadodi Thendral - Yelamalai Kaatukulle

ப‌டம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : இளையராஜா


Image result for Nadodi Thendral



ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு 
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


மூச்சடக்கி கடலுக்குள்ள 
முங்கி முங்கி முத்து எடுத்தேன்... ...
முத்தெடுத்த மறுநிமிசம் 
பத்து நூறு முத்தம் கொடுத்தேன்... ...
இஷ்டப்பட்ட ஜாதிமுத்து 
எனக்குன்னு நெனச்சிருந்தேன்... ...
இன்னொருத்தன் கைகளிலே 
கண்டு மனம் துடிச்சிருந்தேன்... ...
அத்த‌ம வயசு புள்ள முத்துமணி கழுத்து புள்ள‌
முத்து மின்னுமோ ஹோ... விட்டு செல்லுமோ
ஒத்து வருமோ ஹோ... முத்தம் தருமோ

ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் 
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


ஆசப்பட்டு நேசப்பட்டு 
வாங்கி வச்ச கூரப்பட்டு... ...
அங்க தொட்டு இங்க தொட்டு 
அழகா ஏத்தி கட்டு... ...
மணக்கும் குங்குமப்பொட்டு 
சிரிக்கும் செண்பக சிட்டு... ...
அணைச்சி மாமன கட்டு 
அடியே மல்லிக மொட்டு... ...
பாவப்பட்டு பாவப்பட்டு 
கெறங்குது மனசு கெட்டு
ஆச கிளியே ஹோ... அன்ன கிளியே
அள்ளி கொள்ளவா ஹோ... ஆச முல்லையே

ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு 
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் 
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


Nadodi Thendral - Oru Kanam

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



ஓஓஓஓ... ஆஆஆஆ... 
ஓஓஓ... ஓஓ... ஓஓஓ...

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ
தென்றலும் உனை பாடுதே வெண்மதி உனை தேடுதே
இது காதல் ராகமே புரியாத மோகமே
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ


வான் மீது விண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே
உன் தூது வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே
நெஞ்சுக்குள் நீ போட்ட மூக்குத்தி மின்னல்களே
வஞ்சிக்குள் உன் காதல் எண்ணத்தின் பின்னல்களே
ஓஓ... ஓ... இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ

வானமும் பூந்தென்றலும் வாழ்த்துதே மலர் தூவுதே
இது காதல் ராகமே புரியாத மோகமே


மேகத்தில் ஈரம் போல் கண்ணுக்குள் நீர் ஏனம்மா
பூமிக்குள் வைரம் போல் நெஞ்சத்தில் நீ தானம்மா
சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே
சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே
ஓஓ... ஓ... இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ

வானமும் பூந்தென்றலும்  வாழ்த்துதே மலர் தூவுதே

இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ

Nadodi Thendral - Sandhana Marbilae

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...


பல உலகம் போகும் யாத்திரை
நில‌வுல‌கில் நேர்ந்ததே

கனவுலகில் விழுந்த ஓர் திரை
நினைவுல‌கில் விலகுதே

வேள்வி வேள்வி காம‌ தேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே
வேள்வி வேள்வி காம‌ தேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...



அலைஅலையாய் காதல் சங்கொலி 
நடு இரவில் முழங்குதே

மணிமணியாய் நாத கிங்கிணி
புது கவிதை பொழியுதே

வேதம் வேதம் காதல் வேதமே
ஓது ஓது காம‌ தேவனே
வேதம் வேதம் காதல் வேதமே
ஓது ஓது காம‌ தேவனே

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

Nadodi Thendral - Maniyae Mani Kuyilae

ப‌டம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி ‍‍ இங்கு
நான் பாடும் பாமரப்பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே

கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே



பொன்னில் வடித்த சிலையே 
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போலவந்த பாவையே

எண்ண இனிக்கும் நிலையே 
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே

கண்ணிமையில் தூண்டிலிட்டு 
காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே

பெண்ணிவளை ஆதரித்து 
பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் 
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே

கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே

தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி



கண்ணிமைகளை வருத்தி
கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி

என்னுயிரிலே ஒருத்தி
கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி

கோடிமணி ஓசைநெஞ்சில் 
கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்க வரும் தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு 
தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா
ஆசை விளக்கேற்றுதம்மா

பூமரப் பாவை நீயடி இங்கு
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப்பாடல் கேளடி

ஓஓஓஓ...  நானன 
ஓஓஓஓ... நானன ன 

Nadodi Thendral - Yaarum Vilaiyaadum

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, K.S.சித்ரா
பாடல்வரிகள் : இளையராஜா


Image result for Nadodi Thendral



யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரை பார்த்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி



கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
வேடவோ பள்ளு பாடவும் பள்ளிக்கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம்தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லை

ஓ... ஹோ... ஹோய்

வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்லை

ஓ... ஹோ... ஹோய்

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறொடும் ஊரை பார்த்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக்கூட்டம்
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதைக் கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதைக் கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு
டேராவை பார்த்து போடு ஓலத்தோடு
வேறுரு போய்ச்சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதை கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதை கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு



ஆவியாகி போன நீரோ மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது

ஓ... ஹோ... ஹோய்

சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது

ஓ... ஹோ... ஹோய்

சேராத தாமரைப்பூ தண்ணி போலே
மாறாத எங்கள் வாழ்வு வானம் போலே

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

Thursday, November 22, 2018

Nilaave Vaa - Nilave Nilave

படம் : நிலாவே வா (1998)
இசை : வித்யாசாகர்
பாடியவர்க‌ள் :  விஜய், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரிக‌ள் : வைரமுத்து




நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு
மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மனதை தமிழில் சொல்லு
கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு

கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை
பழங்கள் பழுத்த‌தும் பறவைக்கெல்லாம்
மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை
மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா


ரதியே ரதியே ரதியே ரதியே
காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால்
வளரும் பிறையே பிறையே பிறையே
வானம் எட்டி தொடவும் முடியும் என்னால்
வாயில் கனிந்த‌ ஒரு வார்த்தை சொன்னால்
காற்றை கடன் வாங்கி பறந்து போவேன்
கால வெளியோடு கரைந்து போவேன்
சொல்லு சொல்லு சொல்லு

வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு
மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு
கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா
சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும்
சொல்லாத காதல் தீர்வதுண்டா
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா


நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன
கனவே கனவே கனவே கனவே
கண்ணீர் விட்டேன் கண்ணில் ஜீவன் மின்ன
வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு

உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
இரு நூறு மொழிகள் சொல்வதில்லை
தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ அழகே வா வா வா
மொழியே போ போ போ அழகே வா வா வா

Popular Posts