Sunday, September 10, 2017

Nedunalvaadai - Ore Oru Kanpaarvai

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: யாசின் நிஸார், பூர்ணிமா கிருஷ்ணன்
பாடல் வரிகள்: வைரமுத்து





ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே


வெய்யில் காயும் செடிகள் தானே
மழைதன்னை நேசிக்கும்
உடல் தாண்டும் காதல் தானே
உண்மை அன்பை யாசிக்கும்

ஊரைவிட்டு போனால் என்ன‌
உள்ளம் உன்னை பூசிக்கும்
சிறகுகொன்று வேண்டும் என்று
சின்ன உள்ளம் நேசிக்கும்

உன்பேரை சொல்லி கொண்டு
உயிரை நான் கிள்ளி கொண்டு
காற்றோடு பேசி கொண்டு வாழ்வேன் ராசாத்தி

கண்ணீரை முடி கொண்டு
கனவோடு பாடி கொண்டு
காற்றோடு தேடி கொண்டு வாழ்வேன் கண்ணாளா

இடைவெளிகளின் வெளியிலே
இரு இதயங்கள் எரியுதே

எரிவதிலும் சுகமிருக்கு
எரியும் மெழுகும் ஒளி வீசும்

அடி நம்மை கண்டு கண்ணீர் சிந்திக்
கரைந்தே போனது மேகம்

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே



எந்த பக்கம் பார்க்கும் போதும்
அன்பே உந்தன் பிம்பங்கள்
கண்ணில் ஏதும் கோளாறில்லை
கண்ணா என்னை நம்புங்கள்

மேகம் ஏதும் சிந்தாமல்
மண்ணில் என்ன ஈரங்கள்
கண்ணே உன்னை காணாமல்
கண்ணீர் செய்த சாரங்கள்

ஊர் என்ன சொன்னால் என்ன‌
யார் என்ன சொன்னால் என்ன‌
இதயத்தின் ஆசை ஒசை என்றும் நில்லாது

கை தீண்டல் வேண்டாம் பெண்ணே
கண் தீண்டல் போதும் கண்ணே
காலத்தின் கடைசி வரையில் ஜீவன் போகாது

உன்னை ஒரு முறை காணவே
உயிர் முழுவதும் ஏங்குதே

நெஞ்சடியில் காணுகிறேன்
நினைவே நினைவே நீங்காதே

அட நெஞ்ச உன்வசம் ஆகியபோது
நினைவும் கனவும் ஏது?

Thursday, September 7, 2017

Nedunalvaadai - Thanga Kaavadi

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: மச்சியம் பாலா, கலக்கல் காவ்யா, சுகந்தி
பாடல் வரிகள்: வைரமுத்து





தங்க காவடி எடுக்கிறோம் சாமி
எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க‌
சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி
சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க‌

மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க‌

மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க‌

வாழாத பிஞ்சுகள ஒங்க‌
வாயால வாழ்த்திடுங்க‌

பொல்லாத பகை முடிக்க‌
ரெண்டு பூமால சூட்டிடுங்க‌

ஈயோடு எறும்புகளும் இங்க‌ 
இஷ்டம் போல் வாழுதுங்க‌
ஆனாலும் ஆணும் பொண்ணும்
தினம் அல்லாடி போகுதுங்க‌

சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள‌
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌
பருவம் கனிஞ்சிருக்குது
படி கடக்கணும் வீட்டுக்குள்ள‌
துணிஞ்சி முடிவெடுக்கணும்
துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல‌

சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள‌
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌


புத்தம் புது நெல் குத்து பொங்க வைப்போம்
இங்க ஏழ சனம் எல்லாரும் திங்க வைப்போம்

ஏ... நல்லது கெட்டது எல்லாமே சொல்லி வைப்போம்
வரம் கொடுக்கலயா சாமி தலைய கிள்ளி வைப்போம்

மாசம் மூணு மழை பெய்ய வேணும்
சாமிகளே எங்க சாமிகளே

ஆணும் பொண்ணும் அன்பாக வேணும்
தெய்வகளே எங்க தெய்வகளே

பொண்ணுங்க அணிகின்ற புது மஞ்சத்தாலி
வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க‌

பூச்சூடும் மணவாளன் புகழோடு வாழ
வயதான தெய்வங்க வழி காட்டுங்க‌



அன்பு கொண்ட உள்ளத்துக்கா அக்கபோரு
ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு

சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு
நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு

நீதி நியாயம் தவறாகிப் போனா 
வாதாடுவோம் இன்னும் போராடுவோம்

பந்தம் பாசம் சிறையாகி போனா
படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்

ஊரெல்லாம் பயிர்வாழ மழை காட்டும் சாமி
உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா

கொடுமீசை கொடுவாளு போதாது சாமி
கூடாத பகையெல்லாம் பலி போடய்யா

Wednesday, September 6, 2017

Nedunalvaadai - Yedho Aagippochu

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன், யாசின் நிஸார்
பாடல் வரிகள்: வைரமுத்து







ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா

பைத்தியமா ஏம் பருவத்த சுத்தவிட்ட‌
பம்பரமா பெண் தாங்காதய்யா
சத்தியமா நான் சாதஞ் சோறு உண்ணலையே
பத்தியமா கண் தூங்காதய்யா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா



காதல் வந்த பொண்ணும்
கண்ணடிச்ச கண்ணும்
உரியவ‌ன் சொல்லாம ஒறங்கிடுமா?

ஒத்த மழத்தூறல்
முத்தந்தரும் போதும்
கொடிகளின் கும்மாளம் கொறைஞ்சிடுமா?

உறவெல்லாம் வெறுத்தாலும்
ஊரெல்லாம் பகைச்சாலும்
ஒங்கூட வாழ்வேன் சுந்தரா

இன்பத்தில் பொரண்டாலும்
துன்பத்தில் மெரண்டாலும்
சரிபாதி நீதான் சங்கரா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா


ஒன்னத் தொட்ட இன்பம்
புத்திக்குள்ள போனா
கண்ணுமண்ணு எல்லாமே தெரியலையே

பொட்டப்பிள்ள குள்ள‌
எட்டு கோடி இன்பம்
முன்னபின்ன எப்போதுங் காங்கலையே

எலும்பெல்லாந் தேனூற‌
நரம்பெல்லாம் பூப்பூக்க‌
எளம்பொண்ணு ஏதோ செஞ்சிட்டா

ஒடம்பெல்லாம் கடுங்காய்ச்சல்
உள்ளுக்குள் பனிமுட்டம்
மகராசி மாயம் பண்ணிட்டா

ஒருவேளை தந்த இன்பம்
மறுவேளை வருமா என்று
ருசி கண்ட நெஞ்சு கேட்குது

தவறென்று கண்டபின்னும்
தடுமாறும் ஏழை உள்ளம்
படித் தாண்ட தானே பாக்குது

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லம்மா

நெஞ்சா பழத்துக்குள்ள‌
கொஞ்சம் கூடுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானம்மா

Nedunalvaadai - Karuvatheva

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: தீபக்
பாடல் வரிகள்: வைரமுத்து

Image result for nedunalvaadai tamil movie wiki


கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

பொட்டபிள்ள பழுதாப்போச்சு கருவாத்தேவா
பெத்த பிள்ள பகையா போச்சு விதிதானே யார் வெல்வா?
சொந்தமெல்லாம் சொமையாப்போச்சு கருவாத்தேவா
அண்ணந்தம்பி பகையானா மக எங்கே போவா?

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா


முள்ளு மேல ஒரு சொந்தமோ?
எந்த பக்கம் எது கிழியுமோ?
மானங்காக்க ஒரு கோவங்காட்ட‌ இந்த வாழ்க்கையில் எடமில்ல‌
வேட்டி ஒன்னு தான் மிச்சமோ?
நீ காட்டும் பாசம் அது உச்சமோ?
வானம் பாத்து இந்த பூமி பொளந்திருக்கு மேகம் துளியில்ல‌

தேகந்தான் தேயும்.. செருப்பெல்லாந் தேயும்
நீ காட்டும் பேரன்பு தேயாதய்யா
நிலங்கூட தீரும் கடல் கூட தீரும்
நீ பெத்த‌ கடன் மட்டும் தீராதய்யா
ஒரு பசுவின் தியாகந்தான் உசுரா ஒழுகுது பாலாக‌
ஒரு மனுசனின் தியாகந்தான் ஒவ்வொரு குடும்பம் ஆளாக‌

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா



சொத்து இருந்தாலும் தொல்லையே
அது இத்து விழுந்தாலும் தொல்லையே
பாசமுள்ள ஒரு பாவிமனசு அது படுத்தா தூங்காது
பாரம் எறங்கும் ஒரு வயசுல‌
புது பாரம் ஏறுவது நியாயமா?
பாவம் வாழமரம் அய்யோ ஏழமரம் இடிய தாங்காது

நரை கொண்ட கேசம் திரை கொண்ட தேகம்
திடமான ஒன் நெஞ்சு நரைக்காதய்யா
உறவெல்லாம் மாறும் வரவெல்லாந் தீரும்
உசுரான ஒம்பாசம் வெளுக்காதய்யா
ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக‌
நதியோடிய தடமெல்லாம் குடும்பம் வளருது பயிராக‌


கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

Popular Posts