Sunday, September 10, 2017

Nedunalvaadai - Ore Oru Kanpaarvai

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: யாசின் நிஸார், பூர்ணிமா கிருஷ்ணன்
பாடல் வரிகள்: வைரமுத்து





ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே


வெய்யில் காயும் செடிகள் தானே
மழைதன்னை நேசிக்கும்
உடல் தாண்டும் காதல் தானே
உண்மை அன்பை யாசிக்கும்

ஊரைவிட்டு போனால் என்ன‌
உள்ளம் உன்னை பூசிக்கும்
சிறகுகொன்று வேண்டும் என்று
சின்ன உள்ளம் நேசிக்கும்

உன்பேரை சொல்லி கொண்டு
உயிரை நான் கிள்ளி கொண்டு
காற்றோடு பேசி கொண்டு வாழ்வேன் ராசாத்தி

கண்ணீரை முடி கொண்டு
கனவோடு பாடி கொண்டு
காற்றோடு தேடி கொண்டு வாழ்வேன் கண்ணாளா

இடைவெளிகளின் வெளியிலே
இரு இதயங்கள் எரியுதே

எரிவதிலும் சுகமிருக்கு
எரியும் மெழுகும் ஒளி வீசும்

அடி நம்மை கண்டு கண்ணீர் சிந்திக்
கரைந்தே போனது மேகம்

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே



எந்த பக்கம் பார்க்கும் போதும்
அன்பே உந்தன் பிம்பங்கள்
கண்ணில் ஏதும் கோளாறில்லை
கண்ணா என்னை நம்புங்கள்

மேகம் ஏதும் சிந்தாமல்
மண்ணில் என்ன ஈரங்கள்
கண்ணே உன்னை காணாமல்
கண்ணீர் செய்த சாரங்கள்

ஊர் என்ன சொன்னால் என்ன‌
யார் என்ன சொன்னால் என்ன‌
இதயத்தின் ஆசை ஒசை என்றும் நில்லாது

கை தீண்டல் வேண்டாம் பெண்ணே
கண் தீண்டல் போதும் கண்ணே
காலத்தின் கடைசி வரையில் ஜீவன் போகாது

உன்னை ஒரு முறை காணவே
உயிர் முழுவதும் ஏங்குதே

நெஞ்சடியில் காணுகிறேன்
நினைவே நினைவே நீங்காதே

அட நெஞ்ச உன்வசம் ஆகியபோது
நினைவும் கனவும் ஏது?

Popular Posts