Wednesday, September 6, 2017

Nedunalvaadai - Karuvatheva

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: தீபக்
பாடல் வரிகள்: வைரமுத்து

Image result for nedunalvaadai tamil movie wiki


கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

பொட்டபிள்ள பழுதாப்போச்சு கருவாத்தேவா
பெத்த பிள்ள பகையா போச்சு விதிதானே யார் வெல்வா?
சொந்தமெல்லாம் சொமையாப்போச்சு கருவாத்தேவா
அண்ணந்தம்பி பகையானா மக எங்கே போவா?

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா


முள்ளு மேல ஒரு சொந்தமோ?
எந்த பக்கம் எது கிழியுமோ?
மானங்காக்க ஒரு கோவங்காட்ட‌ இந்த வாழ்க்கையில் எடமில்ல‌
வேட்டி ஒன்னு தான் மிச்சமோ?
நீ காட்டும் பாசம் அது உச்சமோ?
வானம் பாத்து இந்த பூமி பொளந்திருக்கு மேகம் துளியில்ல‌

தேகந்தான் தேயும்.. செருப்பெல்லாந் தேயும்
நீ காட்டும் பேரன்பு தேயாதய்யா
நிலங்கூட தீரும் கடல் கூட தீரும்
நீ பெத்த‌ கடன் மட்டும் தீராதய்யா
ஒரு பசுவின் தியாகந்தான் உசுரா ஒழுகுது பாலாக‌
ஒரு மனுசனின் தியாகந்தான் ஒவ்வொரு குடும்பம் ஆளாக‌

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா



சொத்து இருந்தாலும் தொல்லையே
அது இத்து விழுந்தாலும் தொல்லையே
பாசமுள்ள ஒரு பாவிமனசு அது படுத்தா தூங்காது
பாரம் எறங்கும் ஒரு வயசுல‌
புது பாரம் ஏறுவது நியாயமா?
பாவம் வாழமரம் அய்யோ ஏழமரம் இடிய தாங்காது

நரை கொண்ட கேசம் திரை கொண்ட தேகம்
திடமான ஒன் நெஞ்சு நரைக்காதய்யா
உறவெல்லாம் மாறும் வரவெல்லாந் தீரும்
உசுரான ஒம்பாசம் வெளுக்காதய்யா
ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக‌
நதியோடிய தடமெல்லாம் குடும்பம் வளருது பயிராக‌


கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

Popular Posts