Showing posts with label Sanjay. Show all posts
Showing posts with label Sanjay. Show all posts

Friday, July 9, 2021

Konjam Pesu

படம்: கொஞ்சம் பேசு (2021)

இசை: நரேன்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன்

பாடல்வரிகள்: யுகபாரதி

தயாரிப்பு: ராஜு முருகன்





ஒ...ஒ...ஒ...ஒ...

ஒ...ஒ...ஒ...ஒ...
ஒ...ஒ...ஒ...ஒ...
ஒ......

ஒற்றை நிலா தேய்ந்துவிட்டது
அன்பே நீயில்லை
ஜன்னல் மழை ஒய்ந்துவிட்டது
நீ ஏன் இல்லை

எச்சில் முத்தம் காய்ந்துவிட்டது
செல்லம் நீயில்லை
நெஞ்சில் இசை தீர்ந்துவிட்டது
நீ ஏன் இல்லை

கண் ரெண்டில் நான் 
கண்டேன் ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் 
ஏன் இந்த பிரிவு

உன்பாடு நான் 
இன்று பேசிய உதடு
மெளனத்தில் கொன்றாலே 
சாவது இனிது

கொஞ்சம் பேசு கோபம் என்ன
தூங்க கண்கள் தா...
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா...


பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள் 
ஒயாமல் பேசும்


முதல்முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
உயிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவேங்கே
ஆசை முகம்மறந்திட
கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா

தூரம் தரும் வலிகளை
சொன்னால் புரியுமா
ஈரம் நதியே விலகுமா

மரித்திடும் நொடியிலும் 
உனது அன்பு உயிர்த்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே


கொஞ்சம் பேசு கோபம் என்ன
தூங்க கண்கள் தா...
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா...

கண்ணே இன்னும் காயம் என்ன
கையில் தூங்க...வா
வார்த்தை ஒன்றும் தேவையில்லை
வாரி கொள்வேன் வா


Source: https://www.youtube.com/watch?v=O18c0dhb7Y0

Thursday, July 14, 2011

ஆனந்த தாண்டவம் - பூவினை திறந்து

படம் : ஆனந்த தாண்டவம் (2008)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : ஸ்ரீனிவாஸ், ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : வைரமுத்து






பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே

காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

தண்டவாளம் பக்கம் பக்கம்
தொட்டு கொள்ள நியாயம் இல்லை
நீயும் நானும் பக்கம் பக்கம்
கட்டி கொள்ள சொந்தம் இல்லை

வாசனை தீண்டிட நினைக்கிறாய் அது வசப்பட போவதில்லை
வானுக்கும் பூமிக்கும் என்றுமே மழை உறவுகள் சேர்வதில்லை
காற்றலை சுழற்சியிலே மீண்டும் இந்த வாசமே
வாசனை திரும்பியதில் உனக்கென்ன கோபமே

இதய கூட்டை பூட்டிக் கொண்டேன்
கதவை தட்டி கலகம் செய்தாய்
கதவை பூட்டி உள்ளே சென்றேன்
கண்கள் வழியே மீண்டும் வந்தாய்

வருஷங்கள் மாறிய போதிலும் புது வசந்தங்கள் வருவதுண்டு
வாழ்க்கையில் கலைகின்ற உறவுகள் புது வடிவத்தில் மலர்வதுண்டு


பூவினை திறந்து கொண்டு போய் ஒளிந்த வாசமே
பூவுடன் மறுபடியும் உனக்கென்ன சினேகமே

விதி என்ற ஆற்றிலே மிதக்கின்ற இலைகள் நாம்

நதி வழி போகின்றோம் எந்த கரை சேர்கின்றோம்

Popular Posts