Showing posts with label Nazriya Nazim. Show all posts
Showing posts with label Nazriya Nazim. Show all posts

Sunday, February 27, 2022

Thirumanam Enum Nikkah - Enthaaraa Enthaaraa

 படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)

இசை : ஜிப்ரான்

பாடியவர்கள் : ஷாதாப் ஃபரிதி, சின்மயி

பாடல்வரிகள் : கார்த்திக் நேத்தா






என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் பூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்தே

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே


உன்தாரா உன்தாரா நானே உன்தாரா

என் வானம் பூத்ததே சீரா

கண்பூரா கண்பூரா நீயேதான் வீரா

என் பார்வை ஆனதே கூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே



ஏனோ இன்று ஏனோ

நா.....ன் உந்தன் நானோ

நீயோ இல்லை நானோ

நா....ம் என்னும் நாமோ


தூண்டிலா..... நீ ஊஞ்சலா


தூரலா நீ..... காணலா


ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் 

என் வார்த்தை ஆனதே

இல்லாத ஊரில் இல்லாத பேரில்

நம் காதல் வாழுமே 


ஒய் நம் காதல் வாழுமே



உன் அசைவினில் என் திசைகளை 

பட படவென தந்தாய்

மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்

கண் இமைகளில் என் இரவினை

கத கதப்புடன் தந்தாய்

கண் அவிழ்கையில் வெண்ணிலவொளி தந்தாய்


பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்

என் நாட்கள் தீர்ந்ததே

உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்

நம் தேடல் தீருமே.....



என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் தாரா


தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல...


வெட்கங்கள் பேசுதே...

Saturday, November 1, 2014

Thirumanam Enum Nikkah - Chillendra Chillendra

படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : சுந்தர் நாராயன ராவ் - கௌஷிகி சக்ரபர்டி -
                         முன்னா சௌகத் அலி -  ஜிப்ரான்
பாடல்வரிகள் : காதல்மதி - முன்னா சௌகத் அலி





ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெஹந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹெனா

நேசத்தின் சாரல்கள் தூவத் தூவ

தேரி பியாரி அதாஏ தேரா பாங்க் பன்   
க்யா பாத் ஹே வல்லா

வானில் உதிர்ந்த இறகொன்று 
காற்றின் கன்னங்களில் 
கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன் 
தேடி அலைந்தேன்... ஓ.. ஓ.. ஓஓஓ...

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


கர்தேஷே துனியா...
சுற்றிடும் உலகம் 
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில் 
ஓம்கார ஒலியும்
ஆமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும் 
உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது

கண் மூடிப் போனாலும் 
உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப் போல் பெண் ஒன்று
அச்சாக இன்னொன்று கண்டேனே நான் 
இன்று யாரென்று சொல்

தாயா... உன் சேயா...

நேசத்தை சொல்ல 
வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே


இரண்டு வானம் விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன?

ஏழை ஒருவன் கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்

ஆ... மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் என்ன?

சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூ மழை
சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்

பாசமா... நேசமா...

மெஹபூபு மேரா ஹோ 
பொஹத்து கூபு சஜ்னா...  
வாழ்வே உன்னோடு   
என்னுடன் இணைந்திட வா

இனி எல்லாம் நீ தான் 
நீயே நான் தான்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே 
பாடிப் பறந்தேனே

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


Friday, October 31, 2014

Thirumanam Enum Nikkah - Kannukkul Pothivaippen

படம் : திருமணம் என்னும் நிக்காஹ்
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : சாருலதா மணி, சாதனா சர்கம், கணேஷ், விஜய் பிரகாஷ்
பாடல்வரிகள் : பார்வதி




கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !

நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே… யோசிக்கிறேன்…

உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!

கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்

முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்
உன்னாலே… பூரிக்கிறேன்…

உன் சிரிப்பு சரத்தில் மகிழ மரத்தில் பூ தைக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட

இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


Popular Posts