Friday, October 31, 2014

Thirumanam Enum Nikkah - Kannukkul Pothivaippen

படம் : திருமணம் என்னும் நிக்காஹ்
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : சாருலதா மணி, சாதனா சர்கம், கணேஷ், விஜய் பிரகாஷ்
பாடல்வரிகள் : பார்வதி




கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !

நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே… யோசிக்கிறேன்…

உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!

கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்

முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்
உன்னாலே… பூரிக்கிறேன்…

உன் சிரிப்பு சரத்தில் மகிழ மரத்தில் பூ தைக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட

இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


Popular Posts