Showing posts with label Ramesh Vinayakam. Show all posts
Showing posts with label Ramesh Vinayakam. Show all posts

Tuesday, February 5, 2013

அழகிய தீயே - விழிகளின் அருகினில்

படம் : அழகிய தீயே (2004)
இசை : ரமேஷ் விநாயகம்
பாடியவர் :  ரமேஷ் விநாயகம்




விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... ய
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம்... ஓ.... ய
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல... ஓ.... ய


பூ போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம் துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... ய


பூவில் என்ன புத்தம் புது வாசம்
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்
யாரோ என்று எந்தன் மனம் தேடும்

கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம் இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா... துடிப்பது போல் நடிக்கிறதா...
உரைத்திடவா... மறைத்திடவா... ரகசியமாய் தவித்திடவா...
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது... ஓ... ய


விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலங்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... ய
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம்... ஓ.... ய
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல... ஓ.... ய



Wednesday, December 29, 2010

நள தமயந்தி - என்ன இது



படம் : நள தமயந்தி (2003)
இசை : ரமேஷ் வினாயகம்

பாடியவர் :  சின்மயி, 
ரமேஷ் வினாயகம்
பாடல் வரி : 
நா.முத்துகுமார்




என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது



என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ 
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ 
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ 



என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ 
பூமி எதிர் பார்த்து மழை தூரல் விழுமோ 


காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ 
கை நகத்தை பல் கடிக்க ஆசை படுமோ 


எதுவுமே... எதுவுமே... எதுவுமே... 
எதுவுமே... நடக்கலாம் 
இறகின்றி இளமனம் பறக்கலாம் 


இதுவரை... விடுகதை 
இனிவரும் கதை ஒரு தொடர் கதை


வேண்டும் வசந்தம் வாசல் வரலாம் 


ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது 
என்ன இது என்ன இது என்னை கொல்வது 

என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


காற்றடிது அணைவதில்லை காதல் அகல் தான் 
சாட்சி என நிற்கிறது தாஜ் மஹல் தான் 


கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது 
கண் உறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது 


இனி வரும்..................................................... 
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரை போல் நீளலாம்


உனக்கு நான்.... பிறந்தவள் 
மனமென்னும் கதவை தான் திறந்தவள் 


காதல் பிறந்தால் காவல் கடக்கும் 


போட்டு வைத்த கோட்டுக்குள்ளே 
காதல் என்றும் நின்றதில்லை 

என்ன இது என்ன இது என்னை கொல்வது 
என்னவென்று கேட்பவற்கு என்ன சொல்வது


புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ 
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ 
நாடி எங்கும் மூடி ஒரு கோடி மின்னல் கோலமிடுதோ 

Popular Posts