Showing posts with label Lakshmi. Show all posts
Showing posts with label Lakshmi. Show all posts

Sunday, January 20, 2013

Indru Nee Naalai Naan - Pon Vaanam Panneer

படம் : இன்று நீ நாளை நான் (1983)
இசை : இளையராஜா
பாடகர்கள் : S. ஜானகி
பாடல்வரிகள் :  வைரமுத்து

Image result for Indru Nee Naalai Naan




ஹா ஆ ஆ ஆ ஆ
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்


ஹா ஆ ஆ.... ஹா ஆ ஆ....

ஹா ஆ ஆ.... ஹா ஆ ஆ ஆ ஆ....
ஹா ஆ ஆ.... ஹா ஆ ஆ ஆ ஆ....
லல் லல் லல லல... லல் லல் லல லல...
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா...
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

லல் லல் லல லல... லல் லல் லல லல...
லல் லல் லல லல... லல் லல் லல லல...
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…



பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்


Indru Nee Nalai Naan - Mottu Vitta Mullai Kodi

படம் : இன்று நீ நாளை நான் (1983)
இசை : இளையராஜா
பாடகர்கள் : S. ஜானகி, S.P.சைலஜா
பாடல்வரிகள் :  வைரமுத்து

Image result for Indru Nee Naalai Naan




மொட்டு விட்ட முல்ல கொடி
மச்சான் தொட்ட மஞ்ச கிளி

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது


உன் கேலி போதுமடி.... மாங்கா திங்கும் மாதமடி

உன் கேலி போதுமடி.... ஒளிஞ்சிருந்து மாங்கா திங்கும் மாதமடி
அடி பெண்ணே வயிரு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி
நெஞ்சுகுள்ளே ஏதோ ஆசை யார பாத்து நானும் பேச
அலபாயுது வாலிப மனசு ஆச வயசு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்க அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது


ஒன் வீட்டு தூலியடி என் வீட்டில் ஆடுமடி

என் வீட்டு தூலியடி பறந்து வந்து ஒன் வீட்டில் ஆடுமடி
அந்த சுட்டி வளரும் தங்க கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி
ரோசா பூவும் மஞ்ச பூசும் பாத்துபுட்ட கண்ணும் கூசும்
உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும் பூவா சிரிக்கும்

ஹே... மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது

Wednesday, August 4, 2010

பாசப் பறவைகள் - தென்பாண்டித் தமிழே



படம்: பாசப் பறவைகள் (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா




       


தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்


தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்


வாழ்த்தி உன்னை பாடவே வார்த்தை தோன்றவில்லையே

பார்த்து பார்த்து கண்ணிலே பாசம் மாறவில்லையே

அன்பு என்னும் கூண்டிலே ஆடிப் பாடும் பூங்குயில்
ஆசை தீபம் ஏற்றுதே அண்ணன் உன்னை போற்றுதே

தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே
தாவி வந்த பிள்ளையே தாயைப் பார்த்ததில்லையே

தாயைப் போல பார்க்கிறேன் வேறு பார்வை இல்லையே

மஞ்சளோடு குங்குமம் கொண்டு வாழ வேண்டுமே 
நீ என்றும் வாழ வேண்டுமே

தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே
இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்
பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்


தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்றுதானம்மா
அன்பு கொண்டு பாடிடும் அண்ணன் என்னை பாரம்மா

கோவில் தேவை இல்லையே நேரில் வந்த கோவிலே
பாடும் எந்தன் பாவிலே நாளும் வாழும் தெய்வமே

கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்

கூடு வாழும் குருவிகள் பாடும் பாசப் பறவைகள்

வாழ்த்துவேன் உனை போற்றுவேன் 
வாழ்வெல்லாம் உனை ஏற்றுவேன்

காலம் காலம் யாவிலும் சேர்ந்து வாழ வேண்டுவேன்நாம் சேர்ந்து வாழ வேண்டுவேன்


தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே


தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம்

பாசம் என்னும் ஆலயம் உனை பாட வேண்டும் ஆயிரம்



தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே








தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே

Popular Posts