Showing posts with label Jayachandran. Show all posts
Showing posts with label Jayachandran. Show all posts

Wednesday, November 5, 2014

Kannathil Muthamittal - Nenjil Jil Jil

படம் : கன்னத்தில் முத்தமிட்டால் (2002)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : மின்மினி
பாடல் வரி : வைரமுத்து



நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...

ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே....
வாழ்வு தொடங்கும் இடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...


எனது சொந்தம் நீ... எனது பகையும் நீ...
காதல் மலரும் நீ... கருவில் முள்ளும் நீ...
செல்ல மழையும் நீ... சின்ன இடியும் நீ...
செல்ல மழையும் நீ... சின்ன இடியும் நீ...
பிறந்த உடலும் நீ... பிரியும் உயிரும் நீ...
பிறந்த உடலும் நீ... பிரியும் உயிரும் நீ...
மரணம் மீண்ட ஜனனம் நீ... 
ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே

நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...
நெஞ்சில் ஜில் ஜில்... ஜில் ஜில்...
காதில் தில் தில்... தில் தில்...
கன்னத்தில் முத்தமிட்டால் நீ...
கன்னத்தில் முத்தமிட்டால்...


Saturday, July 30, 2011

Inaintha Kaigal - Anthi Nera Thendral

படம் : இணைந்த கைகள் (1990)
இசை : மனோஜ் பட்நாகர்

பாடியவர்க‌ள் :  S.P. பாலசுப்பிரமணியம், ஜெயசந்திரன்

பாடல் வரிக‌ள்: ஆபாவாணன்












அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே


தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு



அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...



ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...



உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு


தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு


Thursday, January 20, 2011

மே மாதம் - என் மேல் விழுந்த



படம் : மே மாதம் (1994)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
ஜெயசந்திரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து






என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 



என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
இன்று எழுதிய என் கவியே 

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 


என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 


உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 



என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 

இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணைத் திறந்தால் நீருக்கும் - என் 
மனதைத் திறந்தால் நீயிருப்பாய் 


ஒலியைத் திறந்தால் இசை இருக்கும் - என் 
உயிரைத் திறந்தால் நீ இருப்பாய் 


வானம் திறந்தால் மழை இருக்கும் - என் 
வயதைத் திறந்தால் நீ இருப்பாய் 


இரவைத் திறந்தால் பகல் இருக்கும் - என் 
இமையைத் திறந்தால் நீ இருப்பாய் 



என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

கிளையும் மலரும்  உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 

அலையும் கரையும் உரசுகையில் 
பேசும் பாஷை பேசிடுமோ 

மண்ணும் விண்ணும் உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 


பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை ஆயிவிடுமோ 


என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 

என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 


என் மேல் விழுந்த மழைத் துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் 
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

Wednesday, September 8, 2010

நானே ராஜா நானே மந்திரி - மயங்கினேன் சொல்ல



படம் :நானே ராஜா நானே மந்திரி (1986)
இசை :இளையராஜா

பாடியவர் : ஜெயச்சந்திரன், சுசீலா
பாடல் வரி : வாலி



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே



உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ 
துன்பக் கவிதையோ கதையோ?

இரு கண்ணும் என் நெஞ்சும்

இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?

மணவறையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் 
உந்தன் உறவுதான் உறவு!

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே 


Popular Posts