Saturday, June 29, 2013

தலைவா - யார் இந்த சாலையோரம்

படம்: தலைவா (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்


Thalaivaa film official poster.jpg



யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது

காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்

இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று வேறானது

வண்ணம் நூறானது வானிலே

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது

காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது


தீர தீர ஆசை யாவும் பேசலாம் 

மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் 

இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் 

என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் 


எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன் 


எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது

அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது


மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே

அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின் மனது உலகிலே

அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே

கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி


என் பாதையில் இன்று உன்காலடி


நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்

நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்

இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று வேறானது

வண்ணம் நூறானது வானிலே



Popular Posts