Saturday, June 29, 2013

சகுனி - மனசெல்லாம் மழையே

படம்: சகுனி (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்








மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
மழையே மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே


வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்

ஹா... வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே


காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை... மாறுமே...

ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே... மாயமே...
வெயிலோடு மழை வந்து தூறுமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

மனசெல்லாம் மழையே...


Popular Posts