Wednesday, December 29, 2010

அலைபாயுதே - எவனோ ஒருவன்



படம் : அலைபாயுதே (2000)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
சொர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து





எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் 
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் 
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் 

கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் 
கேட்பதை அவனோ அறியவில்லை 
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே 
அவன் ஓதும் ரகசியம் புரியவில்லை 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 

புல்லாங்குழலே பூங்குழலே 
நீயும் நானும் ஒரு ஜாதி

புல்லாங்குழலே பூங்குழலே 
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே 
உனக்கும் எனக்கும் சரி பாதி 
கண்களை வருடும் தேனிசையில் 
என் காலம் கவலை மறந்திருப்பேன் 
இன்னிசை மட்டும் இல்லையென்றால் 
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன் 

 எவனோ ஒருவன் வாசிக்கிறான்... 
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் 

Popular Posts