Showing posts with label Sivachandran. Show all posts
Showing posts with label Sivachandran. Show all posts

Tuesday, July 27, 2010

Pattina Pravesam - Vaan Nila Nila

படம் : பட்டினப் பிரவேசம் (1977)
இசை : M.S.விஸ்வநாதன்
பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரி : கண்ணதாசன்

Pattina Pravesam.jpg



லா லா லா லா லா லா
லா லா லா லா லா லா


வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?


வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா


தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
தெய்வம் கல்லிலா? - ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?


வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா


வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!


வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா....

Rosaapoo Ravikkaikkaari - Enullil Engo

படம் : ரோசாப்பூ ரவிக்கைகாரி (1979)
இசை : இளையராஜா
பாடியவர் : வாணி ஜெயராம்
பாடல் வரி : புலமைபித்தன்
Image result for Rosaapoo Ravikkaikkaari

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது


என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில்.... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க
காலம் இன்றே தீராதோ
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது


மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே - மோகங்களே
மல்லிகை மாலைகளே... ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்...
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

Popular Posts