Showing posts with label B. Show all posts
Showing posts with label B. Show all posts

Saturday, August 13, 2011

B - Alphabet Movie Title





பம்பாய் (1995)

படித்தால் மட்டும் போதுமா (1962)

பலே பாண்டியா (1962)

பத்ரி (2001)

பாணா காத்தாடி (2010)

பில்லா II  (2012)

பீமா (2008)

புதிய பறவை (1964)

============================================================

சார்லி சாப்ளின் (2002)

சிம்லா ஸ்பெஷல் (1982)

சின்னவர் (1992)

சின்னக் கவுண்டர் (1992)
சின்ன மாப்பிள்ளை (1993)

சின்ன பசங்க நாங்க (1992)
கேப்டன் மகள் (1991)

Thursday, April 7, 2011

பீமா - முதல் மழை



படம் : பீமா (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : 
ஹரிஹரன், பிரசன்னா, மஹதி
பாடல் வரி : யுகபாரதி






முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

ம்ம்ம்... முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே


கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் என்று உணர்ந்தேன்

எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்

முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே


ஒர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஒ... ஒர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்


பெயரே தெரியாத பறவை அழைத்ததே

இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே

Thursday, February 17, 2011

பாம்பே - கண்ணாளனே எனது



படம் : பாம்பே (1995)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  K.S. சித்ரா

பாடல் வரி : வைரமுத்து







சலசலசலசல சோலை கிளியே ஜோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ


உந்தன் கண் ஜாடை விழுந்ததில் நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம் கொஞ்சம்  
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்
ரத்தம் கொதிக்கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடித்துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல
பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ


சலசலசலசல சோலை கிளியே சோடியை தேடிச் செல்
சிலுசிலுசிலுசிலு சக்கரை நிலவே மாலையை மாத்திக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வச்சிக்க


ஒரு மின்சாரம் பார்வையின் வேகம் வேகம்
உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம் தாபம்
என்னோடு நான் கண்டுகொண்டேன்
என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை
இது கனவா இல்லை நனவா
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை


கண்ணாளனே.....


Thursday, January 6, 2011

பம்பாய் - உயிரே உயிரே



படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு 
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு 
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு 
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு 
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு 



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு 
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு 


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன் 
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் 
மலை மீது தீக்குளிப்பேன் 
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே 
அதற்காகவா பாடினேன் 
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே 
அதற்காகத்தான் வாடினேன் 
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் 


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் 
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் 
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் 
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன் 


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு 
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு 


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை 
வாராமல் போய்விடுமா 
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது 
மறு கண்ணும் தூங்கிடுமா 
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன் 
கண்ணாளன் முகம் பார்க்கவே 
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் 
கண்ணா உன் குரல் கேட்கவே 
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே 


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு 
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு 


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் 
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் 
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் 

Wednesday, August 25, 2010

பீமா - எனதுயிரே எனதுயிரே



படம் : பீமா (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : 
சின்மயி, சாதனா சர்கம், நிகில் மேத்யூ
பாடல் வரி : வைரமுத்து




எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

இனி இரவே இல்லை, 
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை, 
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில் 
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே 
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.



நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே....

Monday, August 23, 2010

பாணா காத்தாடி - என் நெஞ்சில் ஒரு



படம் :பாணா காத்தாடி (2010)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :சாதனா சர்கம்
பாடல் வரி: நா.முத்துகுமார்




என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே


என் பெயரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு என கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே


சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் வருந்தினேன் உன்னிடம்
என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என்கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது

காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் என உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே
காதல் இது உயிரும் சொன்னது அன்பே

Wednesday, August 18, 2010

பலே பாண்டியா - வாழ நினைத்தால்


படம்: பலே பாண்டியா (1962)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: T.M.சௌந்தரராஜன், P.சுசீலா
பாடல் வரி: கண்ணதாசன்













Song Download


ஆ...ஆ...ஆஹஹா ஓ... ஹோ ஹோ...

ஆ...ஆ...ஆஹஹா


ஓ... ஹோ ஹோ...


வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்.....


வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா


கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
ன்னை மறந்தே வாழலாம்..........
வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்


ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி


ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி


துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி


துடித்து நிற்கும் இளமை சாட்சி


இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்


வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்

Popular Posts