Wednesday, August 25, 2010

பீமா - எனதுயிரே எனதுயிரே



படம் : பீமா (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : 
சின்மயி, சாதனா சர்கம், நிகில் மேத்யூ
பாடல் வரி : வைரமுத்து




எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே..

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.

இனி இரவே இல்லை, 
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை, 
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..

உன்னைக் காணும் வரையில் 
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே 
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே கடவுளைப் போல் நீ முளைத்தாய்.



நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே....

Popular Posts