படம் : தித்திக்குதே (2003)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்
பாடல்வரிகள் : வைரமுத்து
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
ஹே மைனாவே மைனாவே என் கண்கள்
பூமியில் தேடிய தேடல் நீதானா
விண்மீனாய் தொலைந்த மகள்
வெண் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
மைனாவே மைனாவே என் கண்கள்
பூமியில் தேடிய தேடல் நீ...தானா
நீ போன காலம் தொட்டு
என் வாழ்வில் பகலே இல்லை
இருளோடு உன்னை தேடி இளைத்து விட்டேன்
திசைக்கொன்றாய் தேடி செல்ல
விழி நான்கு இல்லை என்று
கண்ணீரை சிந்தி சிந்தி கரைந்து விட்டேன்
பிரிந்தோம் அன்று துளியாக
இணைந்தோம் இன்று நதியாக
நீரின் தாகம் நீரால் தீர்ந்தது
ஆஆ ஆஆ
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
சில்லென்ற முத்தம் ஒன்று
செல் எல்லாம் நனையும்போது
உள்ளுக்குள் அச்ச பூக்கள் உதிர்கின்றதே
தேரோடு பூவனம் ஒன்று
மாரோடு சரியும்போது
அணுவெல்லாம் ஆகாயம் போல் பிரிகின்றதே
தேகம் ரெண்டும் பிரியாதா
ஜீவன் எரியும் சுடராக
முத்தம் என்னும் எண்ணெய் ஊற்றுவோம்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..........
மைனாவே மைனாவே என் கனவில்
தினம் தினம் கேட்கும் பாடல் நீதானா
ஆஆ...
மைனாவே மைனாவே என் கண்கள்
பூமியில் தேடிய தேடல் நீதானா
விண்மீனாய் தொலைந்த மகள்
வெண் நிலவாய் வந்தாளா
தேடியவன் கைகளிலே
தேவதையாய் விழுந்தாளா
பிரிவுக்கும் சேர்த்து இனிமேல்
வாழ்வோம் வாழ்வோம் என்றாளா