படம் : தித்திக்குதே (2003)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள் : வைரமுத்து
ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஆஆ...
ஆஆஆ... ஆஹா... ஆஆஆஆ...
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்
பயம் போக சீராட்டி பாலூட்டி நீராட்டி
திருமேனி மருதாணி இடுக
உளுந்தாலே களி செய்து வெல்லங்கள் தானிட்டு
நல்லெண்ணெய் தான் விட்டு தருக
பொன்னோடு சீர்கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைக
பொன்னோடு சீர்கொண்டு வருக
இந்த பூவுக்கு புது சேலை புனைக
இயறக்கை தரும் பூப்போடு இன்னுமொரு பூப்பெய்து
வண்ணமலர் குலம் வாழ வாழ்க வாழ்க
தாயாரும் அறியாமல் ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று மலரும்
என்னென்று தெரியாமல் ஏதென்று புரியாமல்
பெண் நெஞ்சில் பேரச்சம் பரவும்