Saturday, April 22, 2017

Ponmana Selvan - Kaana Karunguyile

படம்: பொன்மன செல்வன் (1989)
இசை:  இளையராஜா
பாடியவர்கள்: K.S. சித்ரா, மனோ
பாடல்வரிகள்: கங்கை அமரன்





கான‌ கருங்குயிலே... காதல் ஓர் பாவமடி...

கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் கண‌க்கினிலே கண்ணீர்தான் லாபமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது
அடி கானகருங்குயிலே காதல் ஓர் பாவமடி......


பூமியில் நான் பிறந்த ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது
வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம் வரகூடும் அன்று ஒன்னாகலாம்

கான‌கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது


கண்களில் நீர் வழிந்து கன்ன‌த்தில் ஓடுது
கற்பனை ஆயிரம் தான் எண்ண‌த்தில் ஓடுது
வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது
பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது
இருந்தால் இனி உன்னோடுதான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை வரும் நாளை என்று நான் வாழ்கிறேன்

கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது

அடி கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

காதல் கண‌க்கினிலே கண்ணீர்தான் லாபமடி


Popular Posts