Sunday, November 18, 2012

Adutha Vaarisu - Pesakoodadhu

படம்: அடுத்த வாரிசு (1983)
இசை: இளையராஜா
பாடியவர்கள்:  S.P.பாலசுப்பிரமணியம், P. சுசீலா
பாடல்வரிகள்: பஞ்சு அருணாசலம்




பேசக்கூடாது....

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்...
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்...
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
ஆசை கூடாது...

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ

காலம்யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ

இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா ஹா...
உன்னாலே பசித் தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேலும் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்...
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக்கூடாது ஹோ... ஆ...

ர... ர... ர... ர...
ல... ல... ஹா... ஹா...
ர... ர... ர... ர...
ல... ல... ஹா... ஹா...
ர... ர... ர... ர...
ல... ல... ல... ல...
ர... ர... ர... ர...
ல... ல... ல... ல...

காலைப்பனியும் நீ கண்மனியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும்
நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும்

பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணி மாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்...
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்...
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

ல... ல... ல... ல...

Popular Posts