Thursday, October 25, 2012

அவதாரம் - தென்றல் வந்து

படம்: அவதாரம் (1995)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, S. ஜானகி
பாடல் வரிகள்: வாலி





தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா......
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா
தானத் தந்தத் தானத் தந்தத் தனனா

தந்தனன..... தானனான.... தானனான....
தந்தனன..... தானனான.... தானனான....
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


தம் தம் தம்......  தம் தம் தம்......  தம் தம் தம்...... 
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....
ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ.... ஓ ஓ ஓ....

விவரம் இல்லாமலே பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை இந்த உலகம் அது போல

ஓடும் அது ஓடும் இந்தக் காலம் அது போல

நிலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பெறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே அழகெல்லாம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அந்த எசையா கூவுதம்மா

கிளியே கிளியினமே அதைக் கதையாப் பேசுதம்மா

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே அன்புதான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல

வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நினப்புல


Popular Posts