Friday, August 26, 2011

பூக்களை பறிக்காதீர்கள் - மாலை எனை

படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், S. ஜானகி
பாடல் வரி : T. ராஜேந்தர்

Pookalai Pareekatheergal



மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது


உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா
மடியைத் தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா
இல்லை எனையே ஈர்த்திடவா

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

Popular Posts