Tuesday, August 2, 2011

முதல் மரியாதை - பூங்காத்து

படம் :முதல் மரியாதை (1985)
இசை :இளையராஜா
பாடியவர் :மலேசியா வாசுதேவன், S. ஜானகி
பாடல் வரி : வைரமுத்து







பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா

ராசாவே வருத்தமா...
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே
அடுக்குமா சூரியன் கருக்குமா

என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல

இந்த வேதன யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல

ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த சொன்னேனடி

சொக ராகம் சோகந்தானே...
சொக ராகம் சோகந்தானே...

யாரது போறது...

குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா

பூங்காத்து திரும்புமா என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா


உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்

உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்

மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு வா வா பெண்ணே

எசப் பாட்டு படிச்சேன் நானே...
எசப் பாட்டு படிச்சேன் நானே...

பூங்குயில் யாரது...

கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க

அடி நீ தானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே ஒலகமே மறந்ததே

நான் தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா ஒலகந்தான் மறந்ததா

Popular Posts