Showing posts with label Y. Show all posts
Showing posts with label Y. Show all posts

Tuesday, February 22, 2011

யூத் - சர்க்கரை நிலவே



படம் : யூத் (2002)
இசை : மணி சர்மா

பாடியவர் :  
ஹரீஸ்ராகவேந்திரா
பாடல் வரி : வைரமுத்து








சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே


சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே


மனம் பச்சை தண்ணீ தான் பெண்ணே
அதை பற்ற வைத்தது உன் கண்ணே
என் வாழ்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா?

சர்க்கரை நிலவே பெண் நிலவே
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே

காதல் என்ற ஒன்று அது கடவுள் போல
உணர தானே முடியும் அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் அடி நெஞ்சில் சேமிதேன்
கண்ணே உன் பொன்னகை எல்லாம் கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா?
அதில் கொள்ளை போனது என் தவறா?
பிரிந்து சென்றது உன் தவறா?
நான் புரிந்து கொண்டது என் தவறா?
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா?

கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா ?


நவம்பர் மாத மழையில் நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை 

என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன்
தயக்கம் என்பதே சிறிதும் இன்றி
அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காது என்றாய் ?


Saturday, January 1, 2011

யூத் - சந்தோசம் சந்தோசம்



படம் : யூத் (2002)
இசை : மணி சர்மா

பாடியவர் :  S.P.பால சுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து







சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ.....


சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம்
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு ஓ...


வெற்றியைப் போலவே ஒரு தோல்வியும் நல்லதடி
வேப்பம்பூவிலும் சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல் ஒரு சுற்றம் இல்லையடி
இழையும் புன்னகையால் நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணிப் பண்ணி திருந்திய பிறகுதான் நாகரீகம் பிறந்ததடி
தவறுகள் குற்றமல்ல சரிவுகள் வீழ்ச்சியல்ல பாடம் படி பவளக்கொடி


உள்ளம் என்பது கவலைகள் நிரப்பும் குப்பைத் தொட்டியில்லை
உள்ளம் என்பது பூந்தோட்டியானால் நாளை துன்பமில்லை
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ....


ஆதியில் ஆண்டவன் இந்த பூமியைப் படைத்தானே
அவன் ஆசையைப் போலவே இந்த பூமி அமையலையே
ஆண்டவன் ஆசையே இங்கே பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா
நன்மையென்றும் தீமையென்றும் 
நான்கு பேர்கள் சொல்லுவது நம்முடைய பிழையில்லையே


துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்ப என்ற முத்து வரும்
துணிந்தபின் பயமில்லையே
கண்ணீர்துளியில் வைரங்கள் செய்யும் கலைகள் கண்டுகொள்
காலுக்கு செருப்பு எப்படிவந்தது முள்ளுக்கு நன்றிசொல்


புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு. ஓ...


சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம்
சந்தோசம் இல்லையேன்றால் மனிதர்க்கு ஏதுபலம். 



Wednesday, August 25, 2010

யாரடி நீ மோகினி - வெண்மேகம் பெண்ணாக



படம் :யாரடி நீ மோகினி (2008)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :
ஹரிஹரன்

பாடல் வரி: நா.முத்துகுமார்







ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்....
ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்ம்....
லா லா... லா லா... லா லா லா....


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ 
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ 
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ


மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ 
உன்னை கண்டவரை கண்கலங்க நிற்க வைக்கும் தீ
பெண்ணே ஏன்னடி உண்மை சொல்லடி 
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி 
தேவதை வாழ்வது வீடுல்லை கோவில் 
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன் 
ஒன்றா இரண்டா உன் அழகை பாட 
கண்முடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன் 

உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
உள் நெஞ்சம் திண்டாடுதே


எங்கள் மனதை கொள்ளையடித்தாய் 
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய் 
உன்னை பல்லகினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி 
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ 
இந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ


Popular Posts