Showing posts with label Madonna Sebastian. Show all posts
Showing posts with label Madonna Sebastian. Show all posts

Wednesday, April 12, 2017

Power Paandi - Paarthen

படம் : ப.பாண்டி (2017)
இசை : ஷான் ரோல்டன்
பாடியவர்கள் : ஷான் ரோல்டன், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: செல்வராகவன்


Power paandi poster.jpg



பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சன்ன‌தி காட்டுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்


திருவிழா ஒன்ன முன்னே காட்சிதான் கொடுக்கிறதே
எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல மெதக்கிறனே
மழையில மண்ணின் வாசம் மயங்கி போய் கெடக்கிறனே
வேண்டுன சாமி எல்லாம் வரமா தந்த துணை நீதான்
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன...

பார்த்தேன்... பார்த்தேன்... 
சாஞ்சேன்..சாஞ்சேன்..

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்

காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி பாடுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல...

Power Paandi - Venpani Malare

படம் : ப.பாண்டி (2017)
இசை : ஷான் ரோல்டன்
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: தனுஷ்


Image result for Power Paandi



வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

வெண்பனி மலரே... உன் இரு விழியால்...


தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே...
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே...
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிதே ...
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே...
பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே...

வெண்பனி மலரே... உன் இரு விழியால்...
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன

காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

Popular Posts