Sunday, September 6, 2015

மெட்ராஸ் - ஆகாயம் தீ

படம் : மெட்ராஸ் (2014)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் :  ப்ரதீப் குமார்
பாடல் வரிகள் : கபிலன்





ஆகாயம்  தீ  பிடிச்சா  நிலா  தூங்குமா  
நீ  இல்லா  நேரமெல்லாம்  நெஞ்சம்  தாங்குமா  

ஆகாயம்  தீ  பிடிச்சா  நிலா  தூங்குமா  
நீ  இல்லா  நேரமெல்லாம்  நெஞ்சம்  தாங்குமா  
சோளக் காட்டு  பொம்மைகொரு  சொந்தம்  யாருமில்ல  
கைய  விட்டு  காதல்  போனா  கையில்  ரேகயில்ல  

கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு  


வாடகைக்கு  காதல்  வாங்கி  வாழவில்ல  யாரும்  
என்ன  மட்டும்  வாழ  சொல்லாதே  
ஒடம்புக்குள்ள  உசுர  விட்டு  போக  சொல்லு  நீதான்  
உன்ன  விட்டு  போக  சொல்லாதே  
காணுகின்ற  காட்சி  எல்லாம்  உந்தன்  பூ  முகம்  
அது  எந்தன்  நியாபகம்  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு  


காதலுக்கு  கண்கள்  இல்லை  கால்கள்  உண்டு  தானே  
சொல்லாமலே  ஓடி  போனாளே  
வேடந்தாங்கல்  பறவைக்கெல்லாம்  வேறு  வேறு  நாடு  
உன்னுடைய  கூடு  நானடி  
அண்ணாந்து  பார்க்கின்ற  கொக்கு  நானடி  
அந்த  விண்மீன்  நீயடி  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள   ஒன்னா  வந்து  சேரு  


ஆகாயம்  தீ  பிடிச்சா  நிலா  தூங்குமா  
நீ  இல்லா  நேரமெல்லாம்  நெஞ்சம்  தாங்குமா  
ஆகாயம்  தீ  பிடிச்ச  நிலா  தூங்குமா  
நீ  இல்லா  நேரமெல்லாம்  நெஞ்சம்  தாங்குமா  
சோளக் காட்டு  பொம்மைகொரு  சொந்தம்  யாருமில்ல  
கைய  விட்டு  காதல்  போனா  கையில்  ரேகயில்ல  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு  
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு  
கண்ணுக்குள்ள  இப்போ  கடல்  கசிவத  பாரு
ஒன்னுக்குள்ள  ஒன்னா  வந்து  சேரு

Popular Posts