Friday, April 10, 2015

உன் கண்ணில் நீர் வழிந்தால் - கண்ணில் என்ன


படம் : உன் கண்ணில் நீர் வழிந்தால்(1985) 
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், S.ஜானகி


UnKannilNeerVazhindal.jpg



கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில்
கண்ணீரா நியாயமா பெண்ணே... ஓஓ....
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர் கோலம்


நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி
என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில்
கண்ணீரா நியாயமா பெண்ணே... ஓஓ....
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர் கோலம்


Popular Posts