Friday, April 10, 2015

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - சுந்தரி பெண்ணே

படம் :  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா  (2014)
இசை : D.இமான்
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள் : யுகபாரதி


Oru Oorla Rendu Raja film poster.jpg



தகிட... தகிட... தக... தகிட... தகிட... தக...
தகிட... தகிட... தக... ஆஆஆஆ......


சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 
வெக்கத்தில் வந்து அவன் பேரை சொல்லடி மெதுவா 

சட்டென்று தொட்ட அவனோடு இன்னமும் கனவா 
சின்ன சிரிப்பில் உன்னை பறித்த மன்னன் அவனும் எவனோ 
கொள்ளை அடித்த அந்த திருடன் மின்னல் அதனின் மகனோ 


தக தகிட... தக தகிட... தக தகிட... தக தகிட... தாம்
தக தகிட... தக தகிட... தக தகிட... தக தகிட... 

சுந்தரி பெண்ணே சுந்தரி பெண்ணே நில்லு நில்லு 
நெஞ்சில உள்ள சங்கதி என்ன சொல்லு சொல்லு 


எப்படி இருந்தான் என்று உன்னை அறிந்தான் 
உன் விழியழகில் விழுந்தவுடன் எதை பேசினான் 
எப்படி சிரித்தான் எத்தனை கொடுத்தான் 
தன்னிலை மறந்த பிறகு அவன் எதற்கெங்கினான் 
எந்த இடத்தில் உன்னை அவனும் கண்டுபிடித்து தொலைந்தான்
எந்த நொடியில் உன்னை நெருங்கி கட்டி பிடிக்க முனைந்தான் 
எதை சொல்லி அவன் உன்னை களவாடினான் 


தக தகிட... தக தகிட... தக தகிட... தக தகிட... தாம்
தக தகிட... தக தகிட... தக தகிட... தக தகிட... 

Popular Posts