Tuesday, August 6, 2013

Jodha Akbar - Ithayam Idam Mariyathe

படம் : ஜோதா அக்பர் (2008)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : கார்த்திக், K.S.சித்ரா

பாடல்வரிகள்: நா.முத்துகுமார்






இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
ஓஓ... மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ


செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ

செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ 

அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து  இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது  இதயமும் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே

இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே


அலை பாயும் காதலே அணையாத தீயா

வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா
இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதைப் போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
உள்ளம் சாய்ந்ததே காதலின் கால் தடம் தந்ததும் தீயா
தந்ததும் தீயா தீயை தொட்டு இரசித்தாய் வந்ததும் நீயா

ம்ம்... எந்தன் கனவில் ஒர் பூந்தோட்டம்

பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே

புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ

இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது இதயம் நகர்ந்தது ஓ....

இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ



Popular Posts