Wednesday, July 24, 2013

Sandhitha Velai - Pen Kiliye Pen Kiliye

படம்: சந்தித்த வேளை (2000)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள்: வைரமுத்து






தீப தீப தீப தீப தீப தீபபப... கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப...
தீப தீப தீப தீப தீப தீபபப...கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப...

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு
பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது

ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று


பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே பூடகம் ஆகுமா

யார் சொல்லியும் பெண் மனம் கேட்க்குமா
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா

விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா

கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா

உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
 உன்  காதிலே கேட்கவே இல்லையா

நீ ஆழி போல் அலைகளை ஏவினாய்
நான் கரையைப்போல் மௌனமாய் நேவினேன்

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா

உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா

நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீர் தேடாதே அங்கே மீன் இல்லை
ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


Popular Posts