Monday, April 30, 2012

வெப்பம் - மழை வரும் அறிகுறி



படம் : வெப்பம் (2011)
இசை: ஜோஷ்வா  ஸ்ரீதர்
பாடியவர்கள் : நரேஷ் அய்யர், சுசன்னே
பாடல் வரி : நா.முத்துகுமார்






மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே  ன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே



மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ



அறியாத வயதில் விதைத்தது ஒ... ஒ... ஒ... ஹோ...
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஒ... ஒ... ஹோ...
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஒ... ஒ... ஒ... ஹோ...
அட யாரது யாரது பறித்தது ஒ... ஒ... ஹோ...
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்தடா


நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ... ஒ... ஒ... ஹோ...
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒ... ஒ... ஹோ...
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒ... ஒ... ஒ... ஹோ...
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒ... ஒ... ஹோ...
இந்த காதலும் ஒருவகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா


மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே  ன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே


மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ



Popular Posts