Sunday, April 15, 2012

கிழக்கு கரை - எனக்கென பிறந்தவ




படம் : கிழக்கு கரை (1991)
இசை : தேவா
பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியம், K.S..சித்ரா
பாடல் வரி: வாலி







ஐ லவ் யூ... லவ் யூ... லவ் யூ... 
எனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
தழுக்குல குழுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன்தானு பாட்டு படிச்சா
யம்மாடியோ......


ஓ... ஓ... ஓ... ஓ...
உனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்




மாஞ்சிட்டு மேடை போட்டு மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட புதுதிட்டம் தீட்டினா


ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா
அன்னாடம் தூக்கம் கெட்டு அணல் மூச்சு வாங்கினா


பச்சக்கிளி தன்னந்தனி இன்..னும் என்னாச்சு


உச்சம் தலையில் வெச்ச மலரில் வெப்பம் உண்டாச்சு


மயங்காதே மாலை மாத்த மாமன் வந்தாச்சு


உனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்




நீ சூட்டும் பூவுக்காக நெடுங்கூந்தல் ஆடுது
நீ வைத்த பொட்டுக்காக நடு நெத்தி வாடுது


ஆத்தாடி உன்னைத்தானே உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும் கடல்  ண்டு கூடுது


அந்திப்பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட


மையல் எழுதி மஞ்சக்குருவி கையை கோர்த்தாட


அடங்காது ஆசை கொண்டு நானும் போராட
உனக்கென பிறந்தவ  ரெக்கைகட்டி பறந்தவ இவதான்


ம்... ஹ... ஹா...  ஹா... 


என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்


ம்... ஹ... ஹா...  ஹா... 


ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தானு பாட்டு படிச்சா
யம்மாடியோ... .


ஆ... ஆ... ஆ... ஆ...
எனக்கென பிறந்தவ ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
தழுக்குல குழுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்





Popular Posts