Tuesday, August 23, 2011

ராம் - ஆராரிராரோ

படம் : ராம் (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : K.J. ஜேசுதாஸ்
பாடல் வரிகள் : சினேகன்






Download this MP3

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து

வேர் இல்லாத மரம் போல் என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் எந்தன் மேலே பட்டால் உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம் நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி நானே தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்த்தைகள் எல்லாம் நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே சுழலாத பூமியும் நீ
இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு என்னோட மடி சாய்ந்து

Popular Posts