Saturday, April 30, 2011

அவன் இவன் - ஒரு மலையோரம்



படம் : அவன் இவன் (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  விஜய் ஜேசுதாஸ், Baby பிரியங்கா,
                         Baby ஸ்ரீனிசா & Baby நித்யஸ்ரீ
பாடல் வரி : 
நா.முத்துகுமார்











ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லம் கொஞ்சி நீ பேச
உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதுமடா
இந்த ஜென்மம் தீருமடா ஒ... ஹோ...


ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு


பெண்ணே முதல் முறை 
உன் அருகிலே வாழ்கிறேன்
போதும் போதும் விடு
நினைவிலே தோய்கிறேன்


என்னானது எந்தன் நெஞ்சம்
ஏன் இந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து
தன் வேலையை காட்டுமோ
உன் எதிரிலே.. ஏ... ஏ... ஏ...


எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே


என் உள்ளிருந்து நீ பேச
இன்னும் என்ன நான் பேச


இந்த மயக்கம் போதுமடி
இன்னும் நெருக்கம் வேண்டுமடி ஒ.... ஹோ...


ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு


உன்னை காணும் வரை
நான் கனவிலே வாழ்ந்தேன்
உன்னை கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே வாழ்கிறேன்


என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும் 
வெறுமையை கூட்டினாய்
உன் காதலிலே… ஏ... ஏ... ஏ...


மனமது புகையினை போலே
மறைத்து யாருமே இல்லையே


என்னுள் நீ சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க


இந்த வார்த்தை போதுமடி..
எந்தன் வாழ்க்கை மாறுமடி..
பெண்ணே....

Popular Posts