Friday, December 7, 2012

Villu Pattukaran - Kalaivaaniyo Raaniyo

படம்: வில்லுப்பாட்டுக்காரன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வாலி


Villu Pattukaran DVD cover.jpg





கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ


கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டைக் காலழகும் 
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும் 
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ



பாதந்தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டிவந்தது கூட
பாதங்கள பார்த்ததுமே பார்வ வல்லையே மேலே
வேதனைகளை மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச்சோல
பூத்ததய்யா பூவு அது கையழகு
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப் பாட 
நல்லதை சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதைப்போல
கண்டதும் நின்னேன் சிலையைப் போல
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற 


கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டைக் காலழகும் 
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும் 
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ


கோடை மழை கொண்டு வரும் கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும் தாகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல சுந்தர தேவி ஜொலிப்பு

கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ
அவ மேலழகும் தண்டைக் காலழகும் 
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும் 
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ



Popular Posts