Friday, December 14, 2012

மெளன ராகம் - பனி விழும்


படம் : மெளன ராகம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் :  S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள் : வாலி






லாலா... லா... லாலா... லா... லா... லாலாலாலா

பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வா... வா....

பனி விழும் இரவு


பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க

பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க

மாலை விளக்கேற்றும் நேரம்
மனசில் ஒரு கோடி பாரம்

தனித்து வாழ்ந்தென்ன லாபம்
தேவையில்லாத தாபம்

தனிமையே போ... இனிமையே வா...
நீரும் வேரும் சேர வேண்டும்

பனி விழும் இரவு நனைந்தது நிலவு


லால... லா... லால... லா... லால... லா...
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது

காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது

ஆசை கொல்லாமல் கொல்லும்
அங்கம் தாளாமல் துள்ளும்

என்னைக் கேட்காமல் ஓடும்
இதயம் உன்னோடு கூடும்

விரகமே ஓ நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்

பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது
வா... வா... வா...

பனி விழும் இரவு நனைந்தது நிலவு

Popular Posts