Thursday, September 15, 2011

தெய்வத் திருமகள் - ஆரிரோ ஆராரிரோ


படம்: தெய்வத் திருமகள் (2011)
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்: ஹரிசரண்
பாடல்: நா.முத்துக்குமார்





 



Download this MP3
(Right Click & Save Link As)



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
ஓ.... தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ... இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே...


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு


முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே



Popular Posts