Tuesday, September 6, 2011

ஜோடி - ஒரு பொய்யாவது


படம் : ஜோடி (1999)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன்
பாடல் வரி : வைரமுத்து








ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில்..... உயிர் வாழ்வேன்


ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்


பூக்களின் முன்னால் சத்தம்
அடி மெளனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம் தான்
ரொம்பப் பக்கம் பக்கம் தான்
பார்த்தால் ரெண்டும் ஒன்று தான்
பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்று தான்
பார்க்கும் கண்கள் ஒன்று தான்
உண்டால் ரெண்டும் வேறு தான்
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்


இரவினைத் திரட்டி... யி..யி..... ஓ.....
இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டி கண்கள் செய்தாரோ...
விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டு
தங்கம் தங்கம் பூசி தோல் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்


அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்
நான் உயிர் வாழ்வேன்... உயிர் வாழ்வேன்...
அந்த ஒரு சொல்லில்... அந்த ஒரு சொல்லில்...

அந்த ஒரு சொல்லில்... அந்த ஒரு சொல்லில்...

சொல்லில் அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்... உயிர் வாழ்வேன்...
உயிர் வாழ்வேன்...

Popular Posts