Monday, August 29, 2011

விண்ணுக்கும் மண்ணுக்கும் - உனக்கென உனக்கென


படம் : விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001)
இசை : S.A ராஜ்குமார்
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம், சுஜாதா
பாடல் வரி : பா.விஜய்









உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே


திருவிழா போல காதல் தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்திதாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீராமஜெயத்தை போல் உனது பெயரை
தினம் எழுதிப் பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பெயரைக் கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி... ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாகக் கேட்கிறேன்
அகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடுப் பார்க்கிறேன்
அடி பொய்யென்ற போதும்
உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே

Popular Posts