Thursday, July 21, 2011

நினைக்க தெரிந்த மனமே - எங்கெங்கு நீ

படம் : நினைக்க தெரிந்த மனமே (1987)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.யேசுதாஸ் & சித்ரா
பாடல் வரி : காமகோடியன்









எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்


பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்


ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது


இரு நெஞ்சின் துன்பம் இது காதல் தான்
அதுபோல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்


பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே


சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்


உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்


பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே




எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்


லல... லல... லல...

Popular Posts