Saturday, July 30, 2011

Inaintha Kaigal - Anthi Nera Thendral

படம் : இணைந்த கைகள் (1990)
இசை : மனோஜ் பட்நாகர்

பாடியவர்க‌ள் :  S.P. பாலசுப்பிரமணியம், ஜெயசந்திரன்

பாடல் வரிக‌ள்: ஆபாவாணன்












அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே


தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு



அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...



ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...



உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு


தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு


Popular Posts