Monday, January 10, 2011

தீபாவளி - காதல் வைத்து



படம் : தீபாவளி (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  விஜய் யேசுதாஸ் 
பாடல் வரி : 
நா. முத்துக்குமார்




காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன் 

காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை 
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னை பார்த்த துறக்கத்தில் தான் 

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்


உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்   


காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன் 


காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன் 

Popular Posts