Wednesday, April 12, 2017

Naanum Rowdy Dhaan - Neeyum Naanum

படம்: நானும் ரெளடி தான் (2015)
இசை: அனிருத் 
பாடியவர்: நிதி மோகன், அனிருத்
பாடல்வரிகள்: தாமரை


Image result for naanum rowdy thaan first look



நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ... நான் பகல் இரவு... நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

நான் பகல் இரவு  நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு

நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே


ஒலி இல்லா உலகத்தில் 
இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய்

காதில் பேசினாய்...

மொழி இல்லா மௌனத்தில் 
விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய்

கண்ணால் பேசினாய்...

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு

நீ வேண்டுமே இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

Popular Posts