Thursday, August 20, 2015

நான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான்

படம்: நான் அடிமை இல்லை  (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்:  S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: வாலி





Download this MP3

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது


ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஓ... ஓ... ஓ... ஓ...

வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்

உருவானது நல்ல சிவரஞ்சனி

உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

ராகங்களின் ஆலாபனை

மோகங்களின் ஆராதனை

உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது


காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ ஓ... ஓ... ஓ... ஓ...

ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ

வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

வளையோசைதான் நல்ல மணிமந்திரம்

நாந்தானைய்யா நீலாம்பரி

தாலாட்டவா ஹா ஹா ஹா நடுராத்திரி

சுருதியும் லயமும் சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்.... ம்ம்ம்ம்

உன் பாடல்தான்... ஆஆஆஆ
ஓயாமல் இசைக்கின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது

Popular Posts